கோல்கொண்டா சுல்தானகம்

கோல்கொண்டா சுல்தானகம் அல்லது குதுப் சாகி வம்சம், (Qutb Shahi dynasty or Golconda Sultanate) தென்னிந்தியாவின் தற்கால தெலங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் தெற்குப் பகுதிகளை, கோல்கொண்டாவை தலைநகரமாகக் கொண்டு 1518 முதல் 1686 முடிய ஆண்ட பாரசீக சியா இசுலாமியர்கள் ஆவர்.[3][4] [5]

கோல்கொண்டா சுல்தானகம்
1518–1687
கொடி of குதுப் சாகி
குதுப் சாகி வம்சத்தின் கோல்கொண்டா சுல்தானகத்தின் கொடி
தக்காணத்தில் கோல்கொண்டா சுல்தானகம்
தக்காணத்தில் கோல்கொண்டா சுல்தானகம்
தலைநகரம்கோல்கொண்டா (1519-1591)
ஐதராபாத் (1591-1687)
பேசப்படும் மொழிகள்பாரசீகம்(அலுவல் மொழி)[1]
தெலுங்கு[2]
சமயம்
சியா இசுலாம்
அரசாங்கம்முடியாட்சி
குதுப் ஷா 
• 1512–1543
சுல்தான் குயுலி குதுப் உல் முல்க்
• 1543–1550
ஜம்சீத் கியுலி ஷா
• 1543–1550
சுபான் கியுலி ஷா
• 1550–1580
இப்ராகிம் கியுலி குதுப் ஷா வலி
• 1565-1612
முகமது கியுலி குதுப் ஷா
• 1611–1626
சுல்தான் முகமது குதுப் ஷா
• 1626–1672
அப்துல்லா குதுப் ஷா
• 1672-1686
அப்துல் ஹசன் ஷா
வரலாறு 
• தொடக்கம்
1518
• முடிவு
1687
பரப்பு
[convert: invalid number]
நாணயம்மொஹர்
முந்தையது
பின்னையது
பாமினி சுல்தானகம்
முகலாயப் பேரரசு
தற்போதைய பகுதிகள் இந்தியா

கோல்கொண்டா சுல்தான்கள் அடிக்கடி பிஜப்பூர் சுல்தான்களுடன் பிணக்கு கொண்டிருந்தனர்.[6] 1687ல் முகலாயப் பேரரசர் அவுரங்கசீப், கோல்கொண்டா சுல்தானகத்தை வெற்றி கொண்டு முகலாயப் பேரரசுடன் இணைத்தார்.

சுல்தான் முகமது குதுப் ஷாவின் நினைவிடம், ஐதராபாத்

கோல்கொண்டா குதுப் சாகி வம்சத்தை நிறுவிய சுல்தான் கியுலி குதுப் உல் முல்க், 16ம் நூற்றாண்டின் துவக்கத்தில் தற்கால ஈரானிலிருந்து, தில்லியில் குடியேறிவர். பின்னர் தென்னிந்தியாவின் பாமினி சுல்தான் முகமது ஷாவின் கீழ் படைத்தலைவராக பணியாற்றியவர்.[7]

பாமினி சுல்தானகத்தின் வீழ்ச்சிக்குப் பின் 1512ல் தக்காணத்தின் கோல்கொண்டா பிரதேசங்களைக் கைப்பற்றி, தன்னை கோல்கொண்டா சுல்தானாக 1512ல் அறிவித்துக் கொண்டார்.

இதே காலகட்டத்தில் பாமினி சுல்தானகத்தின் பிற படைத்தலைவர்கள் பாமினி சுல்தானகத்தின் பிற பகுதிகளைக் கைப்பற்றி, அகமதுநகர் சுல்தானகம் பிஜப்பூர் சுல்தானகம், பீதர் சுல்தானகம் மற்றும் பேரர் சுல்தானகங்களை நிறுவி தன்னாட்சியுடன் ஆண்டனர்.

கோல்கொண்டா சுல்தான் தற்கால ஐதராபாத் அருகே சார்மினார் பள்ளிவாசலைக் கட்டினார். கோல்கொண்டாவிற்குப் பின் சுல்தானகத்தின் தலைநகரமாக ஐதராபாத் விளங்கியது.[7] 1687ல் அவுரங்கசீப் கோல்கொண்டா சுல்தானகத்தை கைபப்ற்றும் வரை, கோல்கொண்டா சுல்தான்கள் 171 ஆண்டுகள் ஆட்சிபுரிந்தனர்.[8]

முகமது குயுலி குதுப் சாகி (1580–1612)

தலிகோட்டா சண்டை தொகு

26 சனவரி 1565 அன்று விசயநகரப் பேரரசிற்கும் கோல்கொண்டா சுல்தான் இப்ராகிம் குயுலி குதுப் ஷா வாலி உள்ளிட்ட தக்காண சுல்தான்களுக்கும் இடையே நடைபெற்ற தலைகோட்டை போரில் விஜயநகரப் பேரரசர் ராமராயரின் படைகள் தோற்கடிக்கப்பட்டது.

சமயம் மற்றும் மொழி தொகு

சியா இசுலாமை பின்பற்றிய கோல்கொண்டா சுல்தான்கள், தங்களது தாய்மொழியான பாரசீக மொழியுடன் தெலுங்கு மொழியையும் நன்கறிந்தனர். சார்மினார் எனும் அழகிய பள்ளிவாசலை ஐதராபாத் நகரத்தில் கட்டினர்.

கோல்கொண்டா ஆட்சியாளர்கள் தொகு

கோல்கொண்டா சுல்தானகத்தாஇ ஆண்ட எட்டு ஆட்சியாளர்கள் [9]:

  1. சுல்தான் குயுலி குதுப் உல் முல்க் (1518–1543)[5]
  2. ஜம்சீத் குயுலீ குதுப் ஷா (1543–1550)
  3. சுபான் குயுலி குதுப் ஷா (1550)
  4. இப்ராகிம் குயுலி குதுப் ஷா வாலி (1550–1580)
  5. முகமது குயுலி குதுப் ஷா (1580–1612)
  6. சுல்தான் முகமது குதுப் ஷா (1612–1626)
  7. அப்துல்லா குதுப் ஷா (1626–1672)
  8. அபுல் ஹசன் குதுப் ஷா (1672–1689)

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Brian Spooner and William L. Hanaway, Literacy in the Persianate World: Writing and the Social Order, (University of Pennsylvania Press, 2012), 317.
  2. ஆலம், முசாப்பர் (1998). "The pursuit of Persian: Language in Mughal Politics". Modern Asian Studies (Cambridge University Press) 32 (2): 317–349. doi:10.1017/s0026749x98002947. https://archive.org/details/sim_modern-asian-studies_1998-05_32_2/page/317. ""Ibrahim Qutb Shah encouraged the growth of Telugu and his successor Muhammad Quli Qutb Shah patronized and himself wrote poetry in Telugu and in Dakhni. Abdullah Qutb Shah instituted a special office to prepare the royal edicts in Telugu (dabiri-ye faramin-i Hindavi). While administrative and revenue papers at local levels in the Qutb Shahi Sultanate were prepared largely in Telugu, the royal edicts were often bilingual.'06 The last Qutb Shahi Sultan, Abul Hasan Tana Shah, sometimes issued his orders only in Telugu, with a Persian summary given on the back of the farmans."". 
  3. Christoph Marcinkowski, Shi'ite Identities: Community and Culture in Changing Social Contexts, 169-170;"The Qutb-Shahi kingdom could be considered 'highly Persianate' with a large number of Persian-speaking merchants, scholars, and artisans present at the royal capital."
  4. Annemarie Schimmel, Classical Urdu Literature from the Beginning to Iqbāl, (Otto Harrasowitz, 1975), 143.
  5. 5.0 5.1 Sen, Sailendra (2013). A Textbook of Medieval Indian History. Primus Books. பக். 118. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-9-38060-734-4. 
  6. C.E. Bosworth, The New Islamic Dynasties, (Columbia University Press, 1996), 328.
  7. 7.0 7.1 George Michell, Mark Zebrowski, Architecture and Art of the Deccan Sultanates, (Cambridge University Press, 1999), 17.
  8. Satish Chandra, Medieval India: From Sultanat to the Mughals, Part II, (Har-Anand, 2009), 331.
  9. Golkunda - Qutub Shahi Dynasty


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோல்கொண்டா_சுல்தானகம்&oldid=3816154" இலிருந்து மீள்விக்கப்பட்டது