சத்திரங்கொண்டான்

சத்திரங்கொண்டான் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோயில் வட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். இது சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கும் தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இதன் அஞ்சல் குறியீட்டு எண் 627 756.

முற்காலத்தில் வழிப்போக்கர்கள் இளைப்பாறவும் தங்குவதற்கும் இச்சிற்றூரில் சத்திரம் இருந்ததாகவும் அதன் காரணமாகவே சத்திரங்கொண்டான் எனப் பெயர் வழங்கலாயிற்று என்றும் சொல்லப்படுகிறது. குருவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த இவ்வூரில்தான் சேர்மன் பதவியில் தேர்வுபெற்று வைகோவின் அரசியல் வாழ்க்கை தொடங்கியதாகவும் சொல்லப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சத்திரங்கொண்டான்&oldid=3537412" இலிருந்து மீள்விக்கப்பட்டது