சந்திரலேகா (நடனக்கலைஞர்)

சந்திரலேகா (முழுப்பெயர்: சந்திரலேகா பிரபுதாஸ் படேல்; 6 டிசம்பர் 1928 – 30 டிசம்பர் 2006) பரத நாட்டியத்தை நவீன முறையில் மேம்படுத்திய நடனக்கலைஞர். மேலைநாட்டு நடனக்கலைகளையும் இந்திய நாட்டு களரி போன்ற போர்க்கலைகளையும் பரதநாட்டியத்துடன் இணைத்தார். இந்திய நடனத்தை முன்னெடுத்தவர் என்றும் அவர் புகழப்படுகிறார்.

வாழ்க்கை தொகு

சந்திரலேகா, 1928ம் ஆண்டு டிசம்பர் ஆறாம் தேதி மருத்துவரின் மகளாக மகாராஷ்டிராவில் வாடா என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் பிறப்பால் குஜராத்தி. சட்டம் படித்த சந்திரலேகா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடனக்கலைஞராக ஆனார்.

காஞ்சீபுரம் எல்லப்ப பிள்ளையின் மாணவியாகி பரதநாட்டியம் கற்றார். தஞ்சாவூர் பாலசரஸ்வதி, ருக்மிணிதேவி அருண்டேல் ஆகியோரின் மாணவியாக இருந்தார். கேரளக் களரிப்பயிற்றும் பயின்றிருக்கிறார். இந்திய நடனத்தை மேலைநாட்டு அசைவுகளுடனும், அரங்க உத்திகளுடனும் இணைத்து பெரிய நிகழ்கலையாக ஆக்கினார். ஆடம்பரமான ஒளி, ஒலி அமைப்புகள் கொண்ட நடன நாடகங்கள் அவருடையவை.

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Akademi Awardee". சங்கீத நாடக அகாதமி. 16 டிசம்பர் 2018. Archived from the original on 2018-03-16. https://web.archive.org/web/20180316232654/http://sangeetnatak.gov.in/sna/Awardees.php?section=aa. பார்த்த நாள்: 16 டிசம்பர் 2018.