சாபுர்சி சக்லத்வாலா

சாபுர்சி சக்லத்வாலா (Shapurji Saklatwala 28,மார்ச்சு 1874-16, சனவரி 1936) இந்தியாவைச் சேர்ந்த பிரிட்டிசு அரசியல்வாதி மற்றும் பொதுவுடைமைவாதி ஆவார். இங்கிலாந்தின் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார்.[1]

சாபுர்சி சக்லத்வாலா
Shapurji Saklatvala Edit on Wikidata
பிறப்பு28 மார்ச்சு 1874
இறப்பு16 சனவரி 1936 (அகவை 61)
கல்லறைBrookwood Cemetery
பணிஅரசியல்வாதி

பிறப்பு தொகு

இந்தியாவில் பார்சி இனத்தைச் சேர்ந்த சக்லத்வாலா மும்பையில் பெரும் பணக்காரக் குடும்பத்தில் பிறந்தார். ஜே ஆர் டாட்டாவுக்கு இவர் உறவினர் ஆவார்.[2] 1905 ஆம் ஆண்டில் இவரது குடும்பம் சக்லத்வாலாவை இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தது.

அரசியல் பணிகள் தொகு

  • 1909 இல் இங்கிலாந்து மாஞ்செஸ்டரில் சுதந்திரத் தொழிலாளர் கட்சியில் சேந்தார்.
  • முதல் உலகப் போருக்கு எதிராகக் குரல் எழுப்பினார்.
  • 1917 இல் நடந்த சோவியத்துப் புரட்சி இவரை மாற்றியது. இங்கிலாந்து பொதுவுடைமைக் கட்சியில் இணைந்தார்.
  • 1921 இல் பாரிசில் நடந்த ஆப்பிரிக்க காங்கிரசு மாநாட்டில் கலந்துகொண்டார்.
  • 1926 இல் மே நாள் கொண்டாட்டத்தின் போது லண்டன் பூங்கா ஒன்றில்
  • உரையாற்றினார். அதனால் இவர் கைது செய்யப்பட்டு 2 மாதம் சிறையில் இருந்தார்.
  • 1934 இல் சோவியத்து நாட்டுக்குப் பயணம் செய்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மருத்துவச் சிகிச்சைக்குப் பிறகு நலம் அடைந்தார்.

நினைவுச் சின்னம் தொகு

இவர் நினைவைப் போற்றும் வகையில் இங்கிலாந்து பொதுவுடைமைக் கட்சி லண்டன் சவுத்தாலில் ஒரு இடத்துக்கு சக்லத்வாலா கூடம் என்று பெயர் சூட்டியுள்ளது.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாபுர்சி_சக்லத்வாலா&oldid=3858734" இலிருந்து மீள்விக்கப்பட்டது