சார்ல்ஸ் அன்ரனி

சார்ல்ஸ் அன்ரனி (Charles Anthony) தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மூத்த மகன் ஆவார்[1].

பெயர்க் காரணம் தொகு

தனது இயக்கத்தின் படைத் தளபதிகளுள் ஒருவரான சார்லஸ் அந்தோணி சீலனின் நினைவாக தனது மகனுக்கு சார்ல்ஸ் அன்ரனி என பிரபாகரன் பெயரிட்டார்[2].

கல்வி தொகு

உயர்கல்வி பயில அயர்லாந்துக்கு அனுப்பப்பட்ட சார்ல்ஸ் அன்ரனி, வானூர்திப் பொறியியலில் பட்டம் பெற்றார்.

ஈழப் போராட்டப் பங்களிப்பு தொகு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தொழில்நுட்பப் பிரிவிற்கும், வான் புலிகள் பிரிவிற்கும் இவர் தலைமை தாங்கியதாக நம்பப்பட்டது.

இறப்பு தொகு

2009 ஆம் ஆண்டு மே மாதம் நடந்த இறுதிக்கட்டப் போரில் சார்ல்ஸ் அன்ரனி கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் 2009 மே 18, அன்று அறிவித்தது.[3].

மேற்கோள்கள் தொகு

  1. "SL govt releases picture of Charles Anthony Prabhakaran". indiatodayin. 7 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
  2. "Passport for Prabakaran's son?". தி இந்து. 26 பிப்ரவரி 2003. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014. {{cite web}}: Check date values in: |date= (help)
  3. "Most of LTTE top brass killed: Army". தி இந்து. 19 மே 2009. பார்க்கப்பட்ட நாள் 25 நவம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சார்ல்ஸ்_அன்ரனி&oldid=3929746" இலிருந்து மீள்விக்கப்பட்டது