[[1861]] ஆம் ஆண்டில் ''வீதிக் குழு'' (Road Committee) என அழைக்கப்பட்ட [[உள்ளூராட்சிச் சபைஉள்ளூராட்சி]]யைப்ச் சபையைப் போன்றதொரு அமைப்பு யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டது. பின்னர், [[1906]] ஆம் ஆண்டில் மற்றும் [[1898]] ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட 13 ஆம் இலக்கச் சட்டவிதிகளுக்கு அமைய முதலாவது உள்ளூராட்சிச் சபை (Local Board) உருவானது. [[1921]] ஆம் ஆண்டில் இது, நகரப்பகுதிச் சபை (Urban District Council) ஆகவும், பின்னர் [[1940]] இல், [[நகரசபை]]யாகவும் தரம் உயர்த்தப்பட்டது. [[1949]] ஆம் ஆண்டில் இது மாநகரசபை ஆனது.