அலவன் ஆட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"வளையில் இருக்கும் நண்டு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
23:57, 10 பெப்பிரவரி 2012 இல் நிலவும் திருத்தம்
வளையில் இருக்கும் நண்டுகளை வெளியில் வரச்செய்து அவை நடந்தோடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்தல் சங்ககாலப் பருவப்பெண்டளின் விளையாட்டுகளில் ஒன்று.
கடற்கரை மணலில் சிற்றில் புனந்து விளையாடிய மகளிர் ஆயம் தம் தழையாடை குலுங்க ஓடி கடலலை தாழை மரத்து அடியிலிருந்து அடித்துவந்து தள்ளிய செந்நண்டுகள் ஓடுவதை வேடிக்கை பார்த்தார்களாம். வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி புலவுத்திரை உதைத்த கொடுந்தாட் கண்டல் செம்போர் இரணை அலவன் பார்க்கும் சிறுவிளையாடல் - நற்றிணை 123
கடற்கரை மணலில் ஓரை விளையாடும் மகளிரைக் கண்டு அஞ்சி ஈர நண்டு கடலுக்குள் ஓடிவிடுமாம். நீர்வார் கூந்தல் ஓரை மகளிர் அஞ்சி ஈர் ஞெண்டு கடலில் பரிக்கும் - குறுந்தொகை 401
ஐங்குறுநூறு 23