செரெங்கெட்டி தேசியப் பூங்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Cscen (பேச்சு | பங்களிப்புகள்) |
|||
வரிசை 37:
தம்மால் ''முடிவற்ற வெளி'' என அழைக்கப்பட்ட இப்பகுதிப் புல்வெளிகளில் மசாய் இன மக்கள் 2000 ஆண்டுகளுக்கு மேலாகக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்தனர். செரெங்கெட்டி என்பது [[மசாய் மக்கள்]] இப்பகுதிக்கு வழங்கிய பெயரை அண்ணளவாக ஒத்தது. செருமானியப் புவியியலாளரும், தேடலாய்வாளருமாகிய முனைவர் ஆஸ்கார் போமென் (Oscar Baumann) 1892 ஆம் ஆண்டில் இப்பகுதிக்கு வந்தார். இவர் இப்பகுதியில் தங்கியிருந்தபோது மூன்று [[காண்டாமிருகம்|காண்டாமிருகங்களைக்]] கொன்றார். இப்பகுதிக்கு வந்த முதல் பிரித்தானியர் "இசுட்டெவார்ட் எட்வார்ட் வைட்" (Stewart Edward White) என்பவராவார். இவர் 1913 ஆம் ஆண்டில் வடக்கு செரெங்கெட்டியில் தான் கண்டவை பற்றி எழுதியுள்ளார். இவர் 1920 ஆம் ஆண்டில் மீண்டும் செரங்கெட்டிக்கு வந்து செரொனீரா பகுதியில் மூன்று மாதம் தங்கியிருந்தார். இக் காலத்தில் இசுட்டெவார்டும் அவரது நண்பர்களும் 50 [[சிங்கம்|சிங்கங்களைச்]] சுட்டுக் கொன்றனர்.
வேட்டையாடுவதன் மூலம் சிங்கங்கள் அருகி வந்ததால் பிரித்தானிய அரசு 1921 ஆம் ஆண்டில், இப்பகுதியில் 800 ஏக்கர் பரப்பளவில் ஒரு பகுதியான வேட்டைவிலங்கு ஒதுக்ககம் ஒன்றை
தேசியப் பூங்கா உருவாக்கத்தின் ஒரு பகுதியாக அப்பகுதிகளில் வாழ்ந்த மசாய் இன மக்கள் இன்கோரொங்கோரோ மேட்டுநிலப் பகுதிகளுக்கு இடம்பெயர்க்கப்பட்டனர். இது தொடர்பாக குறிப்பிடத்தக்க அளவில் சர்ச்சைகள் இன்றும் நிலவுகின்றன. இம் முயற்சியின்போது மக்களைக் கட்டாயப்படுத்தியதாகவும், வஞ்சகமாகச் செயற்பட்டதாகவும் குடியேற்றவாத அரசு மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.
செரெங்கெட்டி தான்சானியாவின் மிகப் பழைய தேசியப் பூங்காவாகும். இன்றும் இது நாட்டின் சுற்றுலாத்துறையின் முக்கிய அம்சமாக உள்ளது.
==புவியியல்==
|