பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:இந்திய வரலாறு நீக்கப்பட்டது using HotCat
→‎விரிவாக்கம்: எழுத்துப்பிழை திருத்தம்
வரிசை 24:
 
=== விரிவாக்கம் ===
இத்தகையதொரு வெளிப்படையான ஆதரவின் கீழ், [[கோவா]], பம்பாய் (இப்பொழுது [[மும்பாய்]]) போன்ற இடங்களில் தளங்களைப் பெற்றிருந்த போத்துக்கீசரைக்,போத்துக்கீசரை நிறுவனம் பின்தள்ளியது. நிறுவனம் [[சூரத்]], மதராஸ்(இப்பொழுது [[சென்னை]]) (1639), பம்பாய் (1668), [[கல்கத்தா]] (1690) ஆகிய இடங்களில் தனது வலுவான நிலைகளை அமைத்துக்கொண்டது. 1647 ஆம் ஆண்டளவில், நிறுவனத்துக்கு இந்தியாவில், ''ஆலைகள்'' (factories) எனப்பட்ட புறக்காவல்நிலைகள் 23 ம், 90 ஊழியர்களும் இருந்தனர். இவற்றுள் முக்கியமானவை, வங்காளத்தில் உள்ள [[வில்லியம் கோட்டை]], சென்னையில் உள்ள புனித [[ஜார்ஜ் கோட்டை]], பம்பாய்க் கோட்டை என மதிலால் சூழப்பட்ட கோட்டைகள் ஆகும்.
 
நிறுவனத்தின் முக்கிய வணிகப் பொருள்கள் பருத்தி, பட்டு, நீலச்சாயம் (''indigo''), [[பொட்டாசியம்]] நைத்திரேற்று, தேயிலை என்பனவாகும். [[மலாக்கா நீரிணை]]ப் பகுதிகளில் வாசனைப் பண்டங்களின் வணிகத்தில் ஒல்லாந்தருக்கு இருந்த தனியுரிமையிலும் இவர்கள் தலையிட ஆரம்பித்திருந்தனர். 1711 இல், [[வெள்ளி (உலோகம்)|வெள்ளி]] உலோகத்துக்காகத் [[தேயிலை]]யை வாங்குவதற்காகச் [[சீனா]]விலுள்ள [[காண்டன்|காண்டனில்]] புறக் காவல்நிலைபுறக்காவல்நிலை ஒன்றையும் நிறுவனம் நிறுவியது.
 
1670 ஆம் ஆண்டளவில், [[இரண்டாவது சார்ள்ஸ்]] மன்னர் நிறுவனத்துக்கு மேலும் பல உரிமைகளை வழங்கினார். இது தொடர்பாக ஐந்து தொடர்ச்சியான சட்டமூலங்கள் உருவாக்கப்பட்டன. இதன்படி, சுதந்திரமான ஆட்சிப்பகுதிகளை உருவாக்கிக் கொள்வதற்கும், [[நாணயம்|நாணங்களை]] வெளியிடவும், [[கோட்டை]]கள், [[படை]கள் முதலியவற்றை வைத்திருக்கவும், கூட்டணிகளை உருவாக்கவும், போரில் ஈடுபடவும், [[சமாதானம்]] ஏற்படுத்திக்கொள்ளவும், கைப்பற்றிக் கொண்ட பகுதிகளில், குடிசார் மற்றும் குற்றவியல் நீதி நிர்வாகத்தை நடைமுறைப்படுத்தவும், நிறுவனத்துக்கு உரிமை வழங்கப்பட்டது. வணிகப் போட்டியாளர்களாலும், பிற வல்லரசுகளாலும், பகைமை கொண்ட சில உள்ளூர் ஆட்சியாளர்களாலும் சூழப்பட்டிருந்த நிறுவனம் தனது பாதுகாப்பைத் தேடிக்கொள்வதற்கு இத்தகைய உரிமைகள் வாய்ப்பாக அமைந்தன. 1680ல், பெரும்பாலும், அந்நந்தஅந்தந்த நாடுகளின் உள்ளூர் மக்களைக் கொண்டதாக அமைந்த படைகளைக்படைகளை நிறுவனம் உருவாக்கியது. 1689 ஆம் ஆண்டளவில், வலிமை மிக்க படைபலத்துடன், வங்காளம், மதராஸ், பம்பாய் போன்ற பரந்த மாகாணங்களைச், சுதந்திரமாக நிர்வகித்துக்கொண்டு, இந்தியாவில் ஒரு தனி நாடாகவே செயற்பட்டுவந்தது.
 
=== முழுமையான தனியுரிமைக்கான பாதை ===