திருமயம் சத்திய மூர்த்தி பெருமாள் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
வரிசை 56:
இது ஒரு [[பல்லவர்]] காலத்திய குடைவரைக் கோவிலாகும். [[திருமயம்]] மலைச் சரிவில் ஒரே கல்லினால் அமைந்த அதிசயிக்கத் தக்க குடைவரைக் கோவிலில் இரண்டு பெருமாள் சன்னதிகள் உள்ளன. வேலைப்பாடமைந்த கற்றளியான சத்தியமூர்த்தி கோயில் அவற்றுள் ஒன்று. இக்கோவிலுக்கு ஒரே ஒரு சுற்றுச்சுவர் மட்டும் உள்ளது. எனவே இந்த சத்திய மூர்த்தி பெருமாள் கோவிலை தனியே திருச்சுற்று சுற்றி வரமுடியாது. காரணம் மூலவர் சந்நிதி குடைவரைக் கோயிலாக அமைந்துள்ளதேயாகும் .
==மூலவர் சத்தியமூர்த்தி==
இத்தலத்தில் சோமச்சந்திர விமானத்தின் கீழ், நின்ற கோலத்தில் சத்தியமூர்த்தி எனும் நாமம் தாங்கி ஒரு கரத்தில் கரத்தில் சங்குடனும சங்குடனும் மற்றொரு கரத்தில் பிரயோகச் சக்கரத்துடனும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.
 
==மூலவர் திருமெய்யர்==
இக்குடைவரைக் கோவிலின் மூலவர் ‘யோக சயன மூர்த்தி’யான ’திருமெய்யர்’ உருவம் ஸ்ரீ ரங்கத்தை விட மிகப்பெரிய உருவம் தாங்கியவர். திருமெய்யத்தின் பள்ளி கொண்ட பெருமாள் உருவம் இந்தியாவிலேயே மிகப்பெரியது. சுற்றிலும் தேவர்கள் ரிஷிகள் பெருமாளின் நாபிக் கமலத்திலிருந்து புறப்படும் தாமரை மலரில் பிரம்மாவும் மார்பில் குடியிருக்கும் மகாலட்சுமியும் எழுந்தருளியுள்ளார்கள். மூலவரான பெருமாளுக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை தைல காப்பு இடப்படுகிறது.. ‘மது’ ‘கைடபர்’ என்னும் இரு அசுரர்களிடமிருந்து பூமி தேவியையும், தேவர்கள், கின்னரர்களையும் காப்பற்றி அருள்கிறார் என்கிறது தல வரலாறு.