ஆரணி குப்புசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ஆரணி குப்புசாமி முதலியார்''' ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ்ப் புதின எழுத்தின் முன்னோடிகளில் ஒருவர். 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் [[துப்பறியும் புனைவு|துப்பறியும் புதினங்கள்]] பலவற்றை எழுதியுள்ளார். இரத்தினபுரி இரகசியம் இவரது குறிப்பிடத்தக்க படைப்பு.
 
இவரது வாழ்வு, எழுதிய அனைத்து நூல்களின் எண்ணிக்கை போன்றவை குறித்து முழுமையான குறிப்புகள் இல்லை. 1917ம் ஆண்டு வரை 31க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியிருந்தார் என்று தெரிகிறது. [[சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்|சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும்]], [[சோ. சிவபாதசுந்தரம்|சோ. சிவபாதசுந்தரமும்]] இணைந்து எழுதிய ''தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்'' (1977) எனும் நூலில் 1911 இல் ஒரு இதழில் குப்புசாமி முதலியாரின் புதினமான ''மதன கண்டி'' விமர்சனம் செய்யப்பட்டது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இவர் 1911 அல்லது அதற்கு முன்பிருந்தே எழுதத் தொடங்கிவிட்டார் என சிட்டியும் சிவபாதசுந்தரமும் ஊகிக்கின்றனர். குப்புசாமி முதலியார் 1930கள் வரை தொடர்ந்து புதினங்கள் எழுதி வந்துள்ளார்.
 
==மேற்கோள்கள்==
*[http://www.tamilvu.org/courses/degree/p101/p1013/html/p1013331.htm தமிழ் இணையக் கல்விக் கழகப் பாடம்]
*[http://books.google.co.in/books?ei=Lls9T_v4FMfrrQfR2bTWBw&id=MB62AAAAIAAJ&dq=arni+kuppuswami+indian+review&q=1911#search_anchor Indian Review, Volume 74, 1978]
 
{{stub}}
[[பகுப்பு:தமிழ் எழுத்தாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_குப்புசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது