ஆரணி குப்புசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
இவரது வாழ்வு, எழுதிய அனைத்து நூல்களின் எண்ணிக்கை போன்றவை குறித்து முழுமையான குறிப்புகள் இல்லை. 1917ம் ஆண்டு வரை 31க்கும் மேற்பட்ட புதினங்களை எழுதியிருந்தார் என்று தெரிகிறது. [[சிட்டி பெ. கோ. சுந்தரராஜன்|சிட்டி பெ. கோ. சுந்தரராஜனும்]], [[சோ. சிவபாதசுந்தரம்|சோ. சிவபாதசுந்தரமும்]] இணைந்து எழுதிய ''தமிழ் நாவல் நூற்றாண்டு வரலாறும் வளர்ச்சியும்'' (1977) எனும் நூலில் 1911 இல் ஒரு இதழில் குப்புசாமி முதலியாரின் புதினமான ''மதன கண்டி'' விமர்சனம் செய்யப்பட்டது என்ற தகவல் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம் இவர் 1911 அல்லது அதற்கு முன்பிருந்தே எழுதத் தொடங்கிவிட்டார் எனத் தெரிகிறது. ''[[ஆனந்த போதினி (இதழ்)|ஆனந்த போதினி]]'' இதழில் இவரது புதினங்கள் தொடர்களாக வெளியாகின. இவரது முதல்ப் புதினத்தின் பெயர் லீலா என்றும் மொத்தம் 75 புதினங்களை எழுதினார் என்ற தகவல் என். சுப்பிரமணியன் எழுதிய ''An introduction to Tamil literature'' என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. குப்புசாமி முதலியார் 1920கள் வரை தொடர்ந்து புதினங்கள் எழுதினார். [[ஷெர்லக் ஹோம்ஸ்]] கதாப்பாத்திரத்தை ஒத்த ஆனந்த் சிங் என்ற துப்பறிவாளர் கதாபாத்திரத்தை உருவாக்கினார். இவரது படைப்புகள் [[ஆர்தர் கொனன் டொயில்]], [[ஜார்ஜ் டபிள்யு. எம். ரேனால்ட்ஸ்]] போன்ற ஆங்கிலத் [[குற்றப்புனைவு]] எழுத்தாளர்களின் படைப்புகளைத் தழுவி அமைந்தன.
 
குற்றப்புனைவுப் படைப்புகளைத் தவிர ''இந்து மத உண்மை'', ''கைவல்ய வசனம்'' போன்ற சமய நூல்களையும் எழுதியுள்ளார். [[கொழும்பு|கொழுபிலிருந்து]] வெளியான ''சஞ்சீவகாரணி'' என்ற இதழின் ஆசிரியாகவும் பணியாற்றினார். இவர் தொடங்கிய [[பகவத் கீதை]] மொழிபெயர்ப்பு முழுமை பெறவில்லை.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஆரணி_குப்புசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது