பஞ்சமுக வாத்தியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பஞ்சமுக வாத்தியம்''' வடி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
உரை முன்னேற்றம் |
||
வரிசை 1:
'''பஞ்சமுக வாத்தியம்''' வடிவத்தில் மிகவும் பெரிய தோலிசைக்கருவி
==கோவில் இசைக்கருவி==
இது பெரும்பாலும் கோவில்களில் இடம் பெற்றிருக்கும் நித்ய பூசை நடைபெறும் காலங்கள், சிறப்பு அபிசேக ஆராதனைகள், பண்டிகைகள், கோவில் விழாக்கள் போன்ற முக்கிய நிகழ்வுகள் இடம்பெறும் போது பஞ்சமுக வாத்தியம் என்ற இந்த இசைக்கருவி இசைக்கப்படுகிறது.
திருவாரூர் கோவிலில் உள்ள பஞ்சமுக வாத்தியம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதன் அமைப்பு: ஒரு முகம் பாம்பு சுற்றியது போல் உள்ளது. மற்றொன்று ஸ்வஸதிக போன்ற வடிவில் அமைந்துள்ளது. வேறொரு முகம் தாமரைப்பூ வடிவிலுள்ளது. பிரிதொன்று எவ்வித அடையாளமின்றி உள்ளது. நடுவில் உள்ள ஐந்தாவது முகம் பெரியதாக இருக்கிறது. பஞ்ச முகங்கள் மான் தோலால் கட்டப்பட்டுள்ளன
இது போன்ற தோல் இசைக்கருவியினை வாசிக்க பயிற்சி தேவைப்படுகிறது. இசை நுணுக்கங்களும் உண்டு. பெரும்பாலும் தேர்ச்சிபெற்ற கோவில் ஊழியர்களே இக்கருவியினை இசைக்கிறார்கள்.
==அமைப்பு==
ஐந்து முகங்கள் கொண்ட அடிப்பக்கம் செம்பு (தாமிரம்) அல்லது வெண்கலத்தால் உருவாக்கப்பட்டிருக்கும். மேற்பாகம் தோல் பயன்படுத்தி இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். பஞ்சமுக வாத்தியம் சக்கரம் இணைக்கப்பட்டு இரும்புச் சட்டங்களினுள் அமைக்கப்பட்டிருக்கும். இடம் விட்டு இடம் நகர்த்திச் செல்ல
கோவை தமிழ் செம்மொழி மாநாட்டில் நடைபெற்ற கண்காட்சியில் 700 - 800 ஆண்டுகள் பழைமையான சில இசைக்கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று முற்றிலும் செம்பால் உருவாக்கப்பட்டுள்ள ஒன்றரை டன் எடை உள்ள பஞ்சமுக வாத்தியம்
==மேற்கோள்கள்==
# [http://www.tamilsigaram.com/Linkpages/arts/disp.php?MessageId=2450 கிராமிய இசையை மீட்க ஒரு சி.டி].
|