ஜெ. ஜெ. தாம்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 27:
'''ஜெ.ஜெ. தாம்சன்'''(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற '''[[சர்]] ஜோசப் ஜான் தாம்சன்'''([[டிசம்பர் 18]], [[1856]] - [[ஆகஸ்ட் 30]], [[1940]])அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் [[எதிர்மின்னி|எலக்ட்ரானைக்]] கண்டுபிடித்த ஆங்கில [[இயற்பியல்|இயற்பியலார்]] ஆவார். இவர் [[மின்சாரவியல்]], [[காந்தவியல்]], ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். 'நவீன [[அணு]] இயற்பியலின் தந்தை' எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர்.[[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக 'ஆதம்சு பரிசு' மற்றும் 1906 -ல் [[இயற்பியலுக்கான நோபல் பரிசு]] ஆகியவற்றைப் பெற்றவர்.
==இளமை==
1856- ஆம் ஆண்டு [[இங்கிலாந்து|இங்கிலாந்தின்]] [[மான்செஸ்டர்|மான்செசுடரில்]] உள்ள 'சீத்தம் குன்று' (Cheetham Hill)என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர் ஸ்காட்ட்டியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 1870-ல் [[மன்செஸ்டர்|மான்செசுடரில்]] உள்ள ஓவென்சு கல்லூரியிலும், பின் 1876-ல் [[ஆக்ஸ்போர்டு|ஆக்சுபோர்டில்]] உள்ள டிரினிடி கல்லூரியிலும் சேர்ந்து படித்தார். அங்கு மிகச் சிறப்பாகப் படித்து 'சுமித்ஆதம்சு பரிசை' வென்றார்<ref>{{Venn|id=THN876JJ|name=Thomson, Joseph John}}</ref> . அதன் காரனமாக இவருடைய இறுதிக்காலம் வரை அக்கல்லூரியின் உறுப்பினராக அமர்த்தப்பட்டார். <br />
 
இவருடைய தந்தை இவரை ஒரு பொறியாளராக்க விரும்பினார். ஆனால் இவரின் தந்தை இறந்தபின் அதற்குரிய கட்டணங்களைச் செலுத்த முடியாத சூழ்நிலை அவரின் குடும்பத்திற்கு இருந்ததால் அந்த விருப்பம் நிறைவேறவில்லைஓவென்சு கல்லூரியில் மிகச் சிறந்த பேராசிரியர்கள் கல்வி கற்பித்ததினால் இவருடைய [[அறிவியல்]] கல்வி சிறப்பாக அமைந்தது. 1883 -ல் அக்கல்லூரியிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டார். [[கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்|கேம்பிரிட்சு பல்கலைக் கழகத்தில்]] ஆய்வுமுறை இயற்பியலில் (Experimental Physics) கேவண்டிசு ஆய்வுக்கூடப் பேராசிரியராக அமர்த்தப்பட்டார். இவருக்கு முன்பாக லார்டு ராலே அப்பணியில் பேராசிரியராக இருந்தார். 1884 முதல் 1918 வரை மதிப்பியல் பேராசிரியராக கெம்பிரிட்ஜிலும், லண்டனில் உள்ள ராயல் நிறுவனத்திலும் அமர்த்தப்பட்டார்<ref> name="frs"^ a b Rayleigh (1941). "Joseph John Thomson. 1856-1940". Obituary Notices of Fellows of the Royal Society 3 (10): 586–526. doi:10.1098/rsbm.1941.0024. edit</ref>. ராயல் கழகத்தின் உறுப்பினராகவும் ஆனார். 1890-ல் ரோசு எலிசபெத் என்ற பெண்ணைத் திருமணம் புரிந்துகொண்டார். இவருக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர். இவருடைய மகன் '[[ஜார்ஜ் பேஜட் தாம்சன்]]' மிகச்சிறந்த [[இயற்பியல்]] பேராசிரியராக விளங்கி பின்னாளில் 1937-ல் [[நோபல் பரிசு| பரிசையும்]] வென்றார்.
 
==ஆய்வுப்பணிகள்==
வரிசை 49:
| caption2 = The cathode ray (blue line) was deflected by the electric field (yellow).
}}
தாம்சன் எதிர்மின் கதிர்க்குழாயின் (Cathode Ray Tube) உதவி கொண்டு எதிர் மின் கதிர்களைப் பற்றிய ஆய்வுகளில் எஈடுபட்டார். எதிர்மின்கதிர்களிலிருந்து எதிர்மின்தன்மை தரும் துகளைத் தனியே பிரிக்க இயலுமா என்பது இவருடைய முதல் ஆய்வு ஆகும். ஓர் எலக்ட்ரோ மீட்டரின் உதவி கொண்டு, குழாயில் பல வெட்டுத்துளைகளை உருவாக்கி காந்தப் புலத்தின் உதவி கொண்டு ஆராய்ந்தார். இக்கதிர்களிலிருந்து எதிர் மின்துகளைத் தனியே பிரிக்க இயலாது என்பதை உணர்ந்தார்<ref>^ Thomson (8 February 1897)'On the cathode rays', Proceedings of the Cambridge Philosophical Society, 9, 243</ref>. இரண்டாவதாக மின்புலத்தினால் இக்கதிர்கள் எவ்வாறு தாக்கப்படுகின்றன என்பதைப் பற்றி அராய்ந்தார். அதற்கு வெற்றிடக் குழாயையும் ஒளிருன் தன்மையையும் பயன்படுத்தி ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதன் மூலம் எதிர்மின் கதிர்கள் மின்புலத்தால் தாக்கப்படுவதைக் கண்டறிந்தார்<ref>^ a b J.J. Thomson (1897)"Cathode rays", Philosophical Magazine, 44, 293</ref>.
==மின்னணு(எலக்ட்ரான்) கண்டறிதல்==
மூன்றாவது ஆய்வில் எலக்ட்ரானின் மின்னூட்ட -நிறை விகிதத்தைக் (Charge-mass ratio) கண்டறிய முற்பட்டார். இவர் எதிர்மின் துகள்களைத் 'துகள்கள்(Corpuscles)' என்றே கூறிவந்தார். பின்னாளில் ஜான்ஸ்டோன் ஸ்டோனி என்ற அறிவியலறிஞர் இதை [[|எலக்ட்ரான்|மின்னணு]] என்று உறுதிப் படுத்தினார் <ref>^ Falconer (2001)"Corpuscles to electrons"</ref>. பொருள்கள் மின்தன்மை கொண்டவை என்ற உண்மை இதிலிருந்து தோன்றியது. தற்கால அணுக் கொள்கையும், அணுவையொட்டிய இயற்பியல் விளைவுகளின் விளக்கமும் இதிலிருந்து தோன்றின. எனவே இவர் ''நவீன [[அணு]] [[இயற்பியல்|இயற்பியலின்]] தந்தை'' என்று போற்றப்பட்டார்.
 
1895-ல் 'கணிதவியலின் ஆதாரக் கூறுகள்','மின்சர, காந்தவியலின் கோட்பாடுகள்' என்ற இரு நூல்களையும் வெளியிட்டார். அவை 1921-ல் ஐந்தாவது வெளியீடாகவும் வெளியிடப்பட்டன. 1896-ல் தாம்சன் அமெரிக்கா சென்றர். இவருடைய அணமைக்கால ஆய்வுகளின் அடிப்படையில் அங்கு நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இலண்டன் இராயல் கழகத்தில் நடைபெற்ற மாலைச் சொற்பொழிவின் போது தான் கண்டறிந்த மின்னணு துகளைப் பற்றி அறிவித்தார். 1897 ஏப்ரல் 30 வெள்ளியன்று இதை அறிவித்தார். 1903-ல் அவர் வெளியிட்ட "வாயுக்களின் வழியே மின்சாரம் கடத்துதல் " என்ற தலைப்பில் அதனை ஒரு நூலாகவும் வெளியிட்டார். 'கேவண்டிசு ஆய்வுக்கூடத்தில் தாம்சனின் முக்கியமான பெரிய நாள்கள்' என்ற தலைப்பில் இந்த நூல் இவருடைய மகன் ஜார்ஜ் தாம்சனால் பிற்காலத்தில் (1928,1933 ஆகிய ஆண்டுகளில்) இரண்டு பதிப்புகளில் வெளியிடப்பட்டது. 1904-ல் மீண்டும் அமெரிக்கா சென்றார். பொருள்கள் மற்றும் மின்சாரம் பற்றி யேல் பலகலைக் கழகத்தில் சொற்பொழிவாற்றினார். 'அணுவின் அமைப்பு' பற்றிய இவருடைய கருத்துகள் வெளியிடப்பட்டன.
வரிசை 60:
[[Image:Discovery of neon isotopes.JPG|frame|right|In the bottom right corner of this photographic plate are markings for the two isotopes of neon: neon-20 and neon-22.]]
 
1906-ல் மின்னிறக்கக் குழாயில் வாயுக்களின் வழியே மின்சாரத்தைச் செலுத்தும்போது ஏற்படும் விளைவுகளைப் பற்றிய இவருடைய ஆய்வுகளுக்காக [[நோபல் பரிசு]] வழங்கப்பட்டது. [[ஒளி]], பெயர் தெரியாக் கதிர்கள், பீட்டா, காமாக் கதிர்களின் கதிர்ச் சிதறல்களின் அளவை அளந்தறிவதன் மூலம் அணுக்களில் உள்ள மின்னணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறிதல் ஆகியவற்றில் இவர் ஈடுபட்டார். அது போல நேர்மின் துகள்களின் தன்மை பற்றிய ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இந்த ஆய்வுகள் இவருடைய மாணவரான [[ரூதர்எர்ணஸ்ட் போர்டுரதர்ஃவோர்டு|ரூதர்போர்டுக்கு]] உதவியாக அமைந்து இவருடைய ஆய்வுகளை அவர் தொடர வழி வகுத்தது.
 
==வெளியிட்ட நூலகள்==
வரிசை 77:
'அறிவியல் அறிஞர் ' என்ற தலைப்பில் 'அறிவியல் ஒளி' டிசம்பர் 2009 இதழ் கட்டுரை
== மேற்கோள்கள் ==
<references/>
 
{{commons|Joseph John Thomson}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஜெ._ஜெ._தாம்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது