கோணங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
New page: கோணங்கி (கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்) தமிழ் எழுத்தாளர். கோண... |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
03:06, 11 பெப்பிரவரி 2007 இல் நிலவும் திருத்தம்
கோணங்கி (கோவில்பட்டி, தூத்துக்குடி மாவட்டம்) தமிழ் எழுத்தாளர். கோணங்கியின் இயற்பெயர் இளங்கோ. சுதந்திர போரட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மதுரகவி பாஸ்கரதாசின் பேரன் இவர்.
தமிழ் நவீன கதையுலகின் தனித்துவமான குரல் கோணங்கி யுடையது. கவிதைக்கு மிக நெருக்க மாக உள்ள உரைநடையும், அரூபங்களைமொழியில் சாத்திய மாக்கிக் காட்டும் விந்தையும் கொண்டது இவரது கதையுலகம். கல்குதிரை என்ற சிற்றிதழின் ஆசிரியர்.
மதினிமார்களின் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் ஜாமம் போன்ற சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.
இவரது பாழி, பிதுரா என்ற இரண்டு நாவல்களும் தமிழ் நாவலுக்கென்ற மரபான தளங்களை தவிர்த்து, புதிய கதை சொல்லும் முறையில் எழுதப்பட்டு மிகுந்த கவனம் பெற்றவை.
மதினிமார்கள் கதை (சிறுகதை தொகுப்பு 1986) கொல்லனின் ஆறு பெண் மக்கள் (சிறுகதை தொகுப்பு 1989) பொம்மைகள் உடைபடும் நகரம் (சிறுகதை தொகுப்பு 1992) பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமம் (சிறுகதை தொகுப்பு 1994) உப்புக் கத்தியில் உறையும் சிறுத்தை (சிறுகதை தொகுப்பு 1997) பாழி (2000) பிதிரா (2004)