'''மேளகர்த்தா இராகங்கள்''' [[கருநாடக இசை]]யின் [[இராகம்|இராகங்களில்]], ச - ரி - க - ம - ப - த - நி என்ற ஏழு [[சுரம்|சுரங்]]களையும் கொண்டவையாகும். வேறுபாடுள்ள சுரங்கள் மாறுவதாலேயே வித்தியாசங்கள் ஏற்படுகின்றன.
இதைஇதைத் ''ஜனகதாய் இராகம்'', ''தாய்கர்த்தா இராகம்'', ''கர்த்தாசம்பூர்ண இராகம்'', ''சம்பூர்ணமேள இராகம்'', ''மேளஜனக இராகம்'', என்ற பெயர்களால் அழைப்பர். ஜனகபன்னிரண்டு சுருதிகளைக் கொண்டு, உருவாகும் தாய் இராகங்கள் மொத்தம் 32 தான், இவையே மேள இராகங்கள் என்று கூறப்பட்டன, இதுவே சரியானது என்றும் கருதப் பெறுகின்றது<ref>மு. அருணாசலம், [[தமிழ் இசை இலக்கண வரலாறு (நூல்)|தமிழ் இசை இலக்கண வரலாறு]], பக் 884, "மதுரையில் பிரசித்த நாகசுர வித்துவானாயிருந்த பொன்னுசசமிப் பிள்ளை என்பவர் 72 என்பது சரியல்ல. மேளகர்த்தா என்பது 32 தான் என்று நன்கு நிறுவியிருக்கிறார்"</ref>, ஆனால் வேங்கடமகி என்பவர், தமது [[சதுர்த்தண்டிப் பிரககசிகை]] என்னும் நூலில், 12 சுருதித் தானங்களையே 16 ஆக ஒருவாறு இரட்டுறக் கொண்டு (ரி,க, த,நி ஆகியவற்றை முறைமீறி ஒவ்வொன்றும் 3 பகுதிகளாகக் கொண்டு) 72 மேளகர்த்தா இராகங்களை ஆக்கினார். இன்றைய மரபில் 72 மேளகர்த்தா இராகம் என்பதே பெருவழக்காக ஆகும். இவற்றிலிருந்து பிற பிறந்த இராகங்கள் (ஜன்னிய இராகங்கள்) தோன்றுகின்றன. 72 மேளகர்த்தாக்களும் 16 பெயர்களுடன் [[12 ஸ்வரஸ்தானசுரத்தானம்|12 சுரத்தான]] அடிப்படையில் அமைந்துள்ளன.
== விதிமுறைகள் ==
ஜனக இராகங்கள் அல்லது பிறப்பு இராகங்கள் 5 விதிகளைத் தழுவி அமைக்கப்பட்டுள்ளது. அவையாவன:
# சம்பூர்ண [[ஆரோகணம்]] [[அவரோகணம்]] அல்லது ஏழுசுர ஏறுவரிசை இறங்கு வரிசை.
# கிரம சம்பூர்ண அரோகண அவரோகணம் அல்லது வரிசைப்படியான ஏறு இறங்கு வரிசைகள்.
# அரோகணத்தில் வரும் ஸ்வரஸ்தானங்களேசுரத்தானங்களே அவரோகணத்திலும் வருதல்.
# ஆரோகண அவரோகணம் அஷ்டகமாக அமைந்திருத்தல்.
# மத்தியஸ்தாயி ஷட்ஜத்திலிருந்து மேல்ஸ்தாயி ஷட்ஜம் வரை [[ஸ்வரங்கள்|சுரங்கள்]] ஒழுங்காகச் செல்லுதல்.