இந்திய விடுதலைப் போராட்டத்தில் புரட்சி இயக்கங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்புரட்சி இயக்கங்கள் வேகமாக வளரத்தொடங்கின. [[வங்காளப் பிரிவினை]]யால் வங்காளத்திலும் அதன் அருகிலிருந்த பகுதிகளிலும் ஆயுதப் போராட்டம் புகழ்பெற்றது. யுகாந்தர், அனுசீலசன் சமித்தி போன்ற புரட்சி அமைப்புகள் வெளிப்படையாக செயல்படத்ததொடங்கின. மோகன் பகான் கால்பந்தாட்டச் சங்கம் போன்றவை மறைமுகமாக கேளிக்கை அமைப்புகளின் போர்வையில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக செயல்பட்டன. வெடி குண்டு தயாரித்தல், பிரித்தானிய ஆட்சியாளர்களையும் அவர்களது இந்திய ஆதரவாளர்களையும் படுகொலை செய்தல், மக்களிடையே புரட்சிக் கருத்துகளைப் பரப்புதல், அரசு பணத்தைக் கொள்ளையடித்தல் போன்ற செயல்களில் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர். முதலாம் உலகப் போரின் போது வட அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் செயல்பட்டு வந்த [[கதர் கட்சி]] ஒருங்கிணைக்கப்பட்ட ஆயுதப் புரட்சி மூலம் [[இந்து-ஜெர்மானிய சதி|பிரித்தானிய அரசை வீழ்த்த முயன்று தோற்றது]]. காங்கிரசின் போராட்டங்களுக்கு புரட்சி இயக்கங்களை ஆதரவு அளித்தாலும் அவை போதாதெனக் கருதின. [[ஒத்துழையாமை இயக்கம்|ஒத்துழையாமை இயக்கத்தை]] காந்தி 1922 இல் கைவிட்டது புரட்சியாளர்களுக்கு சாதகமாக அமைந்தது. காந்தியின் முடிவால் ஏமாற்றமடைந்த இளைஞர்கள் பலர் ஆயுதப் போராட்டப் பாதையில் இணைந்தனர்.
 
[[பஞ்சாப் (பிரித்தானிய இந்தியா)|பஞ்சாப்பிலும்]] புரட்சி இயக்கங்கள் தீவிரமாக இயங்கி வந்தன. அவற்றில் முதன்மையானது [[பகத் சிங்]], [[ராம் பிரசாத் பிஸ்மில்]], [[சந்திர சேகர் ஆசாத்]] தலைமையில் இயங்கி வந்த இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பாகும். இவ்வமைப்பு இந்தியா முழுவதும் செயல்பட்ட புரட்சி இயக்கங்களை ஒன்றிணைத்து செயல்பட முயற்சி செய்தது. ஜே. பி. சாண்டர்ஸ் படுகொலை காகோரி கொள்ளை வழக்கு, நடுவண் நாடாளுமன்ற குண்டுவீச்சு போன்றவை இவ்வியக்கம் நடத்திய குறிப்பிடத்தக்க தாக்குதல்கள். 1930களின் துவக்கத்தில் இவ்வியக்கங்கள் வலுவிழந்தன. இவற்றின் தலைவர்கள் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டு தூக்கிலிடப்பட்டனர் அல்லது நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டனர்.
 
இந்திய தேசிய காங்கிரசு தலைமையுடன் ஏற்பட்ட முரண்பாட்டால் கட்சியிலிருந்து வெளியேறிய [[சுபாஷ் சந்திர போஸ்]] தென்கிழக்காசிய நாடுகளில் [[இந்திய தேசிய ராணுவம்|இந்திய தேசிய ராணுவத்தை]] உருவாக்கி சப்பானியப் படைகளுடன் ஆதரவுடன் பிரித்தானியப் பேரரசை தோற்கடிக்க முனைந்தார். 1945 இல் சப்பானின் தோல்வியுடன் இந்திய தேசிய இராணுவம் கலைக்கப்பட்டது. ஆனால் அதன் உறுப்பினர்கள் மீது காலனிய அரசு தொடர்ந்த [[ஐஎன்ஏ வழக்குகள்|வழக்குகள்]] இந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. [[பம்பாய் கலகம்]] போன்ற பிரித்தானிய இந்தியப் படைத்துறைக் கலகங்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தன.
 
{{இந்திய விடுதலை இயக்கம்}}