குடிமைப்பட்ட கால இந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
 
{{குடிமைப்பட்ட இந்தியா}}
'''குடிமைப்பட்ட கால இந்தியா''' அல்லது '''காலனிய இந்தியா''' (''Colonial India'') என்று [[வணிகம்]] மற்றும் ஆளுமை மூலமாக [[ஐரோப்பா|ஐரோப்பிய]] [[குடியேற்றவாதம்|குடியேற்றவாத]] ஆதிக்கத்தில் இருந்த [[இந்தியத் துணைக்கண்டம்|இந்திய துணைக்கண்டத்தின்]] பகுதிகள் குறிப்பிடப்படுகின்றன. இந்தியாவில் காலடி வைத்த முதல் ஐரோப்பிய அதிகாரமாக 327–326 ஆண்டுகளில் படையெடுத்த [[பேரரசன் அலெக்சாந்தர்|அலெக்சாந்தரின்]] இராணுவத்தைக் கூறலாம். வடமேற்கில் அலெக்சாந்தர் நிறுவிய சிற்றரரசுகள் அவர் வெளியேறிய சிறிது காலத்திலேயே நசித்தன. தென்னிந்திய சேர, சோழ, பாண்டிய இராச்சியங்களுடன் ரோமானியர்கள் கடல்வழியே வணிகத் தொடர்பு கொண்டிருந்தபோதும் தங்கள் குடியேற்றங்களை இங்கு அமைக்கும் அல்லது நிலப்பகுதியை கைப்பற்றும் வேட்கையின்றி இருந்தனர். இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இருந்த நறுமணப்பொருள் வணிகம் உலக பொருளாதாரத்தின் அச்சாக அமைந்திருந்தது; இந்த வணிகமே ஐரோப்பியர்களின் கடல்வழித் தேடல்களுக்கு உந்துசக்தியாக இருந்தது. <ref name=CornPrologue>Corn & Glasserman 1999: Prologue</ref><ref>{{cite book | last = Donkin | first = Robin A. | authorlink = Robin Donkin | title = Between East and West: The Moluccas and the Traffic in Spices Up to the Arrival of Europeans | publisher = Diane Publishing Company | month = August | year = 2003 | isbn = 0871692481}}</ref>
 
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் [[போர்த்துக்கல்]]லைச் சேர்ந்த [[வாஸ்கோ ட காமா]] முதல் ஐரோப்பியராக [[ஆப்பிரிக்கா]]வைச் சுற்றிக்கொண்டு இந்தியாவின் மேற்கு கடற்கரையில் [[கோழிக்கோடு|கோழிக்கோட்டை]] அடைந்தார்.அவர் அந்த நகரத்தில் வணிகம் புரிய சாமூத்திரி ராசாவிடம் உரிமை பெற்றார். வணிகப் போட்டியால் மற்ற ஐரோப்பிய நாடுகளும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் வந்திறங்கி தமது வணிக நிறுவனங்களை நிறுவின. [[நெதர்லாந்து|டச்சு]],[[பிரித்தானிய இந்தியா|இங்கிலாந்து]], [[பிரெஞ்சு இந்தியா|பிரான்சு]], [[டென்மார்க்|டேனிசு]] நாட்டினர் பதினேழாம் நூற்றாண்டின் துவக்கத்தில் தங்கள் வணிக மையங்களை நிறுவியிருந்தன.பதினெட்டாம் நூற்றாண்டில் [[முகலாயப் பேரரசு]] பிரிவுகளால் உடைந்ததாலும் [[மராத்தா பேரரசு]] [[மூன்றாம் பானிபட் போர்|மூன்றாம் பானிபட் போருக்குப்]] பின்னர் வலு இழந்தமையாலும் இந்தியாவில் ஓர் நிலைகுலைந்த சூழல் ஏற்பட்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் வலுவற்ற இந்திய குறுமன்னர்களும் அவர்களுக்கிடையே நிலவிய பிணக்குகளும் ஐரோப்பியர்களுக்கு "நட்பு பாராட்டி" சலுகைகளைப் பெறவும் நில உரிமைகள் கைப்பற்றவும் எளிதாக அமைந்தது.
"https://ta.wikipedia.org/wiki/குடிமைப்பட்ட_கால_இந்தியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது