இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 1:
{{Infobox_Sri_Lankan_Political_Party |
party_name = இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் <br/>Ceylon Workers' Congress|
party_logo = [[File:Flag of Ceylon Workers' Congress.svg|200px]]|
leader = ஆறுமுகன் தொண்டமான்|
chairman = |
secretary = [[ஆறுமுகன் தொண்டமான்]]|
ppchairman = |
foundation = [[1939]] |
headquarters = [[கொழும்பு]] |
alliance =[[ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி|ஐக்கிய&nbsp;மக்கள்&nbsp;சுதந்திர&nbsp;முன்னணி]] |
ideology = |
socialpolicy = |
fiscalpolicy = |
}}
'''இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்''' [[இலங்கை]]யில் செயற்பட்டு வரும் ஒரு அரசியல் கட்சியாகும். இது இலங்கை இந்திய காங்கிரஸ் என அழைக்கப்பட்டு வந்தது, இலங்கை சுதந்திரத்தின் பின்னர் பெயர் மாற்றம் ஏற்பட்டது. இது பொதுவாக [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்திய வம்சாவளி தழிழர்களை]] பிரதிநிதித்துவப் படுத்திவந்துள்ளது. இதன் தற்போதைய தலைவர் [[ஆறுமுகன் தொண்டமான்]] ஆவார்.
வரிசை 19:
1900 களின் ஆரம்பத்தில் இலங்கையில் [[இந்தியா|இந்திய]] எதிர்ப்பு அலைகளை எழத்தொடங்கியிருந்தன. இலங்கை, இந்தியர்களை வேலைக்கு அமர்த்துவதை நிறுத்தியது மேலும் அவர்களை நாட்டைவிட்டு வெளியேறும் படி நிர்பந்தித்து வந்தது. இதனால் தோட்டப்புரங்களிலும் கொழும்பிலும் பிறந்து வளர்ந்த இந்திய வம்சாவளி தமிழ் மற்றும் [[மலையாளம்|மலையாளிகள்]] பல இன்னகளுக்கு முன் கொடுத்து வந்தனர். [[சிங்கள மகா சபை]] இந்திய வம்சாவளி மக்களுக்கு எதிரான பல போரட்டங்களை நடத்தி வந்தது.
 
1939 அரசவையில் இரண்டு தீர்மானங்கள் இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. முதலாவது 15, 000 இந்தியர்களை நாடுகடத்தும் தீர்மானம் இரண்டாவது அரச சேவையில் இருந்த சகல இந்தியர்களையும் நாடுகடத்தல் என்பனவாகும். இதன் போது கொழும்பில் ஒன்று கூடிய இந்திய சங்கங்களின் பிரதிதிகள் இவ்விடயத்தை [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசிடமும்]] [[மகாத்மா காந்தி]]யிடமும் கொண்டு செல்வதாக தீர்மானித்தது. அப்போது இலங்கை அரசவை பிரதிந்திகளாக இருந்த வைத்தியலிங்கம், பெரெய்ரா என்ற இருவரும் இந்தியா சென்று காந்தியை சந்த்தித்தனர். காந்தி தனது விசேட பிரதிநிதியாக [[ஜவகர்லால் நேரு]]வை இலங்கை அனுப்பிவைத்தார். [[ஜூலை 18|யூலை 18]] [[1939]] இல் நேரு [[கொழும்பு]] வந்தார். அவர் அப்போதைய அரசவை தலைவர் [[டி. எஸ். சேனநாயக்கா]]வையும் சில அமைச்சர்களையும் சந்தித்து பேச்சு நடத்தினார் பேச்சுக்கள் பலனற்றுப் போகவே, நேரு இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை சந்தித்து அவர்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டிய தேவையை உணர்த்தினார்.
 
== இலங்கை இந்திய காங்கிரஸ் ==
 
நேரு இலங்கையில் இந்திய தேசிய காங்கிரசையொத்த ''இலங்கை இந்திய காங்கிரஸ் (இ.இ.கா.)'' என்ற அமைப்பை உருவாக்கி இலங்கை வாழ் சகல இந்தியர்களையும் அதன் கீழ் கொண்டுவரும்படி இலங்கை வாழ் இந்திய வம்சாவளியினரின் பிரதிந்திகளை கொழும்பில் ஒன்று கூட்டினார். [[ஜூலை 24|யூலை 24]] [[1939]] இல் நேரு தலைமையில் ஒன்றுகூடிய, அப்போது இலங்கையில் இருந்த பிரதான இந்திய சங்களான இலங்கை இந்திய மத்திய சபை மற்றும் இலங்கை இந்திய தேசிய காங்கிரஸ் என்பவற்றின் பிரதிந்திகள் [[ஜூலை 25|யூலை 25]] [[1939]] காலை 1.20 க்கு இலங்கை இந்திய காங்கிரசை உருவாக்கினார்கள். இவ்வதிகாலை கூட்டத்தில் உருவாக்கப்பட்ட இடைக்கால சபையில் 18 பேர் அங்கம் வகித்தனர். மேலதிக 7 பிரதிநிதிகள் வேறு சபைகளில் இருந்து உள்வாங்கப்படுவதற்காக ஒதுக்கப்பட்டது. 18 பிரதிநிதிகளும் இலங்கை இந்திய காங்கிரசின் உருவாக்க பத்திரத்தில் கைச்சாத்திட்டனர். நேரு சாட்சியாகவும் உறுதிப்படுத்துபவராகவும் கைச்சாத்திட்டார். வீ.ஆர்.எம்.வீ.ஏ. இலக்ஷ்மனன் செட்டியார் தலைவராக தெரிந்தெடுக்கப்பட்டார். எச்.எம்.தேசாய் மற்றும் [[அப்துல் அசிஸ்|ஏ.அசிஸ்]] என்பவர்கள் இணைச் செயளாலர்களாக தெரிந்தெடுக்கப்பட்டனர். அன்றே நேரு தலைமையில் இ.இ.காவின் யாப்பு எழுதப்பட்டது.
 
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இலங்கை_தொழிலாளர்_காங்கிரஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது