சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 10:
 
===பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள்===
சீவல்லபன் [[பல்லவர்|பல்லவர்களுடன்]] நடத்திய போர்கள் பலவனவாகும் அவற்றுள் [[தெள்ளாறு|தெள்ளாற்றுப்]] போர்,[[குடமூக்கு|குடமூக்குப்]] போர்,[[அரிசிற்கரை|அரிசிற்கரைப்]] போர் என்பன சிறப்புடைய போர்களாகும்.கி.பி.836 ஆம் ஆண்டளவில் [[மூன்றாம் நந்திவர்மன்|மூன்றாம் நந்திவர்மனுடன்]] சீவல்லபன் போரிட்டு [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தின்]] தென்பகுதியினைக் கைப்பற்றினான்.[[மூன்றாம் நந்திவர்மன்]] மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டுல் குறிப்பிடப்பட்டுள்ளது.[[திருச்சி]] [[சென்னிவார்க் கோவில்]] கல்வெட்டும்,"தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.
 
பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டினை]] இழந்தான்.தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த சீவல்லபன் கோபங்கொண்டான்.தோல்வி மனதை வாட்டியது.தஞ்சை [[கும்பகோணம்]] அன்று குடமூக்கு என்றிருந்தது.குடமூக்குப் போரில் பாண்டியன் ஆற்றலுடன் போரிட்டான்;நந்திவர்மன்,உடன் வந்த [[கங்கர்]],[[சோழர்]],[[காலிங்கர்]] ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் [[நிருபதுங்கவர்மன்]] [[வாகூர்ச் செப்பேடு|வாகூர்ச் செப்பேட்டில்]] இதனைக் குறிப்பிட்டுள்ளான்.
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது