ந. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''வீரமணி ஐயர்''' ([[இணுவில்]], [[இலங்கை]]), பக்திப் பாடல்களைப் புனைந்திருக்கிறார். [[பாபநாசம் சிவன்]] அவர்களின் மாணவர். 'கற்பகவல்லி நின் பொற்பதம்' பாடலை இயற்றியவர்.
 
== வாழ்க்கை ==
1931ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15ந் திகதி பிறந்தவர். மானிப்பாய் இந்துக் கல்லூரியில் படிக்கும்போது சிறந்த மாணவனுக்கான விருதைப் பெற்றவர். கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு மேல் படிப்புக்காக இந்தியா சென்ற இடத்தில், இசை, நாட்டியம், நாடகம் என்பவற்றால் கவரப்பட்டு, திருமதி ருக்மணி அருண்டேல் (பரதநாட்டியம்), எம்.டி.ராமநாதன் (இசை), பாபனாசம் சிவன் (சாஹித்ய குரு) ஆகியோரிடம் பயின்றவர். தாய்நாடு திரும்பி, தான் படித்த மானிப்பாய் இந்துக் கல்லூரியிலேயே ஆசிரியராக பணி புரிந்தார். சில ஆண்டுகளின் பின்னர், கோப்பாய் ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் விரிவுரையாளராக இணைந்து 33 ஆண்டுகள் பணியாற்றி, ஏராளமான இசை,நாட்டிய ஆசிரியர்களை உருவாக்கினார். ஏராளமான சாஹித்யங்களையும், நாட்டிய நாடகங்களையும், ஆலயங்கள் மீதான பாடல்களையும் தன் வாழ்நாளில் இயற்றிய பிரம்மஸ்ரீ யாழ்ப்பாணம் வீரமணி ஐயர் 2003ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ந்திகதி காலமானார்.
 
 
== இயற்றிய பாடல்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ந._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது