பவளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 44:
}}</ref>&nbsp;&nbsp;''See [[Anthozoa]] for details''
}}
'''பவளம்''' அல்லது '''பவழம்''' (''coral'') என்பது ஒருவகை [[கடல்]] வாழ் [[உயிரினம்|உயிரினமாகும்]]. இவை நிடேரியா (Cnidaria)[[தொகுதி (உயிரியல்)|தொகுதியைச்]] சேர்ந்த, அந்தோசோவா (Anthozoa) [[வகுப்பு (உயிரியல்)|வகுப்பைச்]] சேர்ந்தவையாகும். குழியுடலிகளைச் சேர்ந்த இவை சல்லி வேர்கள் போன்ற ஏராளமான கால்களைக் கொண்டவை. நெருக்கமாக அடுக்கப்பட்ட குடியிருப்புகள் போன்ற தோற்றத்தைக் காட்டும் சேர்ந்திருப்பு/சமூக அமைப்பைக் கொண்டிருக்கும். . கடல் நீரில் உள்ள பல்வகை உப்புகளைப் பெருமளவில் பிரித்தெடுத்துத் தங்கள் உடலில் சேமித்து வைத்துக் கொள்ளும் இயல்புடையவை. பவளப் பூச்சிகள் பெரும்பாலும் வெப்ப நீர்க்கடல்களில் காணப்படுகின்றன. இதனால் [[வெப்பமண்டலம்|வெப்பமண்டல]] கடல்களில் [[பவளப் பாறைகள்]] உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இவை கடல் நீரிலுள்ள சுண்ணாம்புச் சத்தை உறிஞ்சி இவை [[கால்சியம்]] கார்பனேற்றைச் சுரப்பதன் மூலம், கடினமான அடிப்படை ஒன்றைத் தோற்றுவிக்கும். இவை பல கிளைகளைக் கொண்ட மரங்களை ஒத்திருக்கும். இவற்றைப் பவளக்கொடிகள் என்று கூறுவர். இந்தப் பவளக்கொடித் திட்டுகள் சேர்ந்து இறுகிப் பாறையாகி தீவுகள் ஆகும். இவற்றைப் பவளத்தீவு என்பர்.
==வாழ்வுமுறை==
பவளப் பூச்சிகள் கடலில் 24°செ. வெப்ப நிலையில் உள்ள 40-50 மீ. ஆழப் பகுதிகளில் மட்டுமே செழித்து வளர்கின்றன. இவற்றால் 18°செ.குறைந்த வெப்ப நிலையில் வாழ முடியாது. இவற்றின் வளர்ச்சிக்கு சூரிய ஒளி பரவக்கூடிய தெளிவான கடல் நீர் அவசியம். கடல் நீரில் உப்பின் அளவு லிட்டருக்கு 35 கிராமுக்கு மேல் இருக்கக்கூடாது.பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் ஆகியவற்றின் வெப்பப் பகுதிகளில் பவளப்பாறைகள் காணப்படுகின்றன. இப்பாறைகள் பவளப்பூச்சிகள், சில வகை ஆல்காக்கள் ஆகியவற்றின் சுண்ணச் சேர்மங்களான (Calcium compounds) எலும்புக்கூடுகளாலும், எச்சங்களாலுமே உருவாக்கப்படுகின்றன.
பவளப் பூச்சிகள் கடலடியில் தனித்தனியாக இல்லாமல் தொகுப்புயிர்களாகவே வளர்கின்றன. இவற்றின் சந்ததிகள் தனியே பிரிந்து செல்லாமல் மரக் குருத்துகளைப் போன்று ஒன்றினைந்தே தொடர்ந்து வாழ்கின்றன. இவற்றில் ஏதேனும் ஒன்றிற்குக் கிட்டுகின்ற இரையானது, தொகுப்புயிர்கள் எல்லாவற்றிற்குமே பயன்படுகிறது.
பவளப்பூச்சிகளால் தண்ணிரிலாமல் வெகுநேரம் உயிர் வாழ முடியாது. எனவேதான் பவழப் பாறைகளின் உயர எல்லை கடல் மட்டத்துடன் நின்று விடுகிறது.
வரிசை 60:
 
==உணவு==
அனேகமான பவள உயிரினங்கள், தமது உடலினுள் இருக்கும் [[இழையம்|இழையங்களில்]] உயிர்வாழும், [[ஒளிச்சேர்க்கை]] செய்யும் ஒருகல [[பாசி|அல்காவின்]] மூலம் இவை தமக்குத் தேவையான [[ஊட்டச்சத்து|ஊட்டச்சத்தையும்]], ஆற்றலையும் பெற்றுக் கொள்கின்றன. பவளப்பூச்சிகள் உணவை தாமே தயாரித்துக் கொள்வது இல்லை. பவளங்களுடன் வாழும் ஆல்காக்கள் எனப்படும் உயிரிகள் உற்பத்திசெய்யும் உணவுச் சத்தை உண்டு பவளங்கள் செழிக்கின்றன. பவளங்களில் இருந்து வெளியாகும் நைட்ரஜன் கழிவுகள் ஆல்காக்களுக்கு உணவாக பயன்படுகிறது. பவளங்கள் வெளிப்படுத்தும் கழிவுகளில் இருந்து ஆல்காக்களுக்கு தேவையான நைட்ரஜன் சத்து கிடைக்கிறது. ஆனால் சிறிய [[மீன்]]கள், [[மிதவைவாழி]]கள் போன்றவற்றை தமது நச்சுத் தன்மை கொண்ட [[உயிரணு]]க்களால் கொட்டுவதன் மூலமும் இவை தமது உணவைப் பெற்றுக்கொள்ளும். ஆல்கா மூலம் உணவைப் பெறுபவையாயின், அவை [[சூரியன்|சூரிய]] [[ஒளி]] கிடைக்கும் இடங்களில் வளரும். எனவே இவை 60 மீற்றருக்கும் குறைவான ஆழமுள்ள இடங்களிலேயே காணப்படும். ஆல்காவுடன் சேர்ந்து வாழாதவையாயின் மிக ஆழமான கடலிலும் வாழும்.அவ்வப்போது தனது உணர் கொம்புகளால் ஏதேனும் உயிரியைப் பிடித்து இரையாக்கிக் கொள்கின்றன.
 
==பயன்கள்==
* பவளம் சேகரிப்பவர்கள் படகில் சென்று கலில் அடித்தளத்தில் வலையை விழச் செய்வார்கள் வலையை இழுக்கும் போது கிடைக்கும் பவளத் தொகுப்புயிர்களின் உடைந்த துண்டுகளைச் சுத்தப்படுத்தி வெட்டி இழைத்து மழமழப்பாக்கி விற்பனை செய்கின்றனர்.
* பவளப்பூச்சிகளால் அணிகலன்களுக்குப் பயன்படும் சிவப்புப் பவழங்கள் கிடைக்கின்றன.
* பவளத்தால் செய்யப்படும் பவழபஸ்பம் என்ற மருந்து இதய நோய்களுக்குச் சிறந்தது.
* பவளத்தீவுகளிலிருந்து கிடைக்கும் கால்சியம் கார்பனேட் மூலம் பற்பசை, வெள்ளை வண்ணப் பூச்சுகள், சலவைத்தூள், ரப்பர், எழுதும் மை, காகிதம், பீங்கான் பொருள்கள், அழகு சாதன்ப் பொருள்கள் ஆகியவை செய்யப்படுகின்றன.
வரிசை 70:
==அழிவை நோக்கியுள்ள பவளப் பாறைகள்==
சுற்றுப் புறச் சூழல்களால் ஏற்படும் மாற்றங்களால் பவழப் பாறைகள் அழிவை எதிர்நோக்கியுள்ளன.
புவி வெப்பமயமாவதன் விளைவுகளால் ஏற்படும் கடல்நீரின் வெப்பநிலை உயர்வு,கடல் நீர்ல் அமிலத்தன்மை அதிகரித்தல்,மனிதர்களால் கடல்நீர் மாசுபடுதல், மீன்பிடித்தல் காரணமாக ஏற்படும் உயிரினச் சமசீர் தன்மையில் ஏற்படும் மாறுபாடு, வண்டல் படிவு, ஆகியவற்றால் பவழப்பாறைகளில் உள்ள தொகுப்புயிரிகள் அழிந்து வருகின்றன.
 
==படத்தொகுப்பு==
"https://ta.wikipedia.org/wiki/பவளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது