சென்னை மாநிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "தமிழ்நாடு"; Quick-adding category "தமிழ்நாட்டு வரலாறு" (using HotCat) |
சி தானியங்கி:clean up |
||
வரிசை 1:
'''சென்னை மாநிலம்''' ( Madras State) [[இந்தியா|இந்தியக் குடியரசில்]] ஒரு மாநிலம். இது தற்கால தமிழ்நாட்டின் முன்னோடியாகும். [[பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு|பிரிட்டிஷ் இந்தியாவில்]] [[சென்னை மாகாணம்]] என்று வழங்கப்பட்ட பகுதிகள், 1950 இல் இந்தியா குடியரசானவுடன் சென்னை மாநிலம் என்றழைப்படலாயிற்று. 1950 முதல் 1953 வரை ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்தின் அனைத்து பகுதிகளும் சென்னை மாநிலத்தில் இடம் பெற்றிருந்தன. இவையாவன - தற்கால [[தமிழ்நாடு]], [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] ஆந்திர மாவட்டங்கள், [[கர்நாடகம்|கர்நாடகத்தின்]] தெற்கு கனரா மாவட்டம் மற்றும் [[கேரளா|கேரளத்தின்]] மலபார் மாவட்டம். அக்டோபர் 1, 1953 இல் ஆந்திர மாவட்டம் சென்னை மாநிலத்திலிருந்து பிரிந்து தனி மாநிலமாகியது. 1956 இல் மொழி வாரியாக மாநிலங்களை அமைக்க மாநில புனரமைப்புச் சட்டம் (States Reorgansiation Act) கொண்டுவரப்பட்டது. இதனால் சென்னை மாநிலத்தின் கன்னடம் பேசும் பகுதிகள் கர்நாடக மாநிலத்துடனும், மலையாளம் பேசும் பகுதிகள் கேரளத்துடன் இணைக்கப்பட்டன. [[திருவிதாங்கூர்]] சம்ஸ்தானத்தின் பகுதியாக விளங்கிய நான்கு தாலுக்காக்களை உள்ளடக்கிய பகுதிகள் [[கன்னியாகுமரி மாவட்டம்]] என்ற பெயரில் சென்னை மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.
[[பகுப்பு:தமிழ்நாட்டு வரலாறு]]
|