திருப்பாணாழ்வார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி தானியங்கி:clean up
வரிசை 1:
'''திருப்பாணாழ்வார்''' [[வைணவம்|வைணவ]] நெறியைப் பின்பற்றி பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு [[ஆழ்வார்கள்|ஆழ்வார்களுள்]] ஒருவர். [[சோழர்|சோழ]] நாட்டின் [[உறையூர்|உறையூரில்]] பிறந்தவர். திருமால் மீது மிகுந்த பக்தி கொண்டவர் எனினும், பாணர் குலத்தைச் சேர்ந்தவர் ஆதலால் [[திருவரங்கம்|திருவரங்கத்தின்]] உள்ளே செல்வதற்கு இவருக்கு அனுமதி கிடையாது. அதனால் இவர் [[காவிரி ஆறு|காவிரி]]யின் மறுகரையில் இருந்தவாறே [[பண்]] இசைத்துத் [[திருமால்|திருமாலை]] வழிபட்டுவந்தார். ஒரு முறை இவரை இழிவுபடுத்திய சிலர் அவரைக் கல்லாலும் அடித்துக் காயப்படுத்தினர். அவரது துன்பம் தீர்க்க விரும்பிய இறைவன் [[இரத்தம்]] வடிந்த முகத்தினராய் லோகசாரங்கர் என்னும் திருமால் பக்தரொருவருக்குக் கனவில் தோன்றியதாகவும், பாணரைக் கல்லால் அடித்தபோது அவர் மனத்திலிருந்த தனக்குக் காயமேற்பட்டதாகக் கூறியதாகவும் வைணவ நூல்கள் கூறுகின்றன. இறைவன் கேட்டுக்கொண்டபடி சாரங்கர், பாணரான திருப்பாணாழ்வாரைத் தனது தோளில் சுமந்து திருவரங்கத்துள் சேர்த்ததாகவும் கூறப்படுகின்றது.
 
இவர் திருமாலின் மீது பத்துப் [[பாடல்]]கள் பாடியுள்ளார். இவை வைணவத் தமிழ் நூல்களின் தொகுப்பான [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] என்னும் நூலில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பத்துப் பாடல்களும் திருமாலின் திருவடிகளில் தொடங்கி தலை வரை உள்ள உறுப்புக்களான, பாதம், ஆடை, உந்தி, உதரபந்தனம், [[மார்பு]], [[கழுத்து]], [[வாய்]], [[கண்]]கள், [[உடல்]], [[தலை]] ஆகிய பத்தையும் பற்றிப் பாடியவை ஆகும்.
 
==எடுத்துக்காட்டு==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாணாழ்வார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது