'''சலாகுத்தீன் அயூப்அய்யூப்''' (''Yusuf Salahuddin ibn Ayyub'', 1137 - மார்ச் 4, 1193, [[அரபு மொழி|அரபு]]: صلاح الدين يوسف بن أيوب; [[குர்தி மொழி|குர்தி]]: سهلاحهدین ئهیوبی) என்பவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (''Saladin'') என அழைக்கப்படும் பிரபல [[இசுலாம்|இசுலாமிய]]ப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு அயூபி பேரரசு என அழைக்கப்படுகின்றது. [[குர்து மக்கள்|குர்திய]] முசுலிமான<ref>http://www.bookrags.com/biography/saladin/|title=Encyclopedia of World Biography on Saladin|accessdate=2008-08-20</ref> சலாகுத்தீன், மூன்றாம் [[சிலுவைப்போர்]]களில் [[ஐரோப்பா|ஐரோப்பிய]] - [[கிறித்தவம்|கிறித்தவ]]ப் படைகளுக்கு எதிராக போரிட்டவர். இந்தப் போர்களில் வெற்றி பெற்று [[எருசலேம்|எருசலேமில்]] இசுலாமியப் பேரரசை ஏற்படுத்திய காரணத்தால், இன்றும் இவர் [[இசுலாம்|இசுலாமிய]] சமூகத்தில் பிரபலமாக உள்ளார். மேலும் இவரது சகிப்புத்தன்மை மற்றும் போர் நெறிமுறைகள் காரணமாக மேற்கத்திய நாடுகளிலும் பிரபலமாக உள்ளார். இவரது ஆட்சிக்காலத்தில் நடந்த யத்தின் போரைத் தவிர்த்த மற்றைய போர்களில் தோல்வியடைந்தவர்களிடம் இவர் கடுமையாகவோ, கொடூரமாகவோ நடந்ததில்லை. இவரது ஆட்சியின் உச்சத்தில் அயூபி பேரரசு [[எகிப்து]], [[சிரியா]], [[இராக்]], [[ஏமன்]] மற்றும் மேற்குக் கரை [[அராபியத் தீபகற்பம்|அரேபிய தீபகற்பத்தை]] உள்ளடக்கியதாக இருந்தது.