அல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: dsb:Wutkowe rostliny
No edit summary
வரிசை 16:
}}
'''அல்லி''' அல்லது '''ஆம்பல்''' என்பது [[நீர்|நீரில்]] வளரும் ஒரு [[கொடி]]யும் அதில் பூக்கும் மலரின் பெயரும் ஆகும். இக்கொடி [[குளம்]], [[பொய்கை]], [[நீர்ச்சுனை]]களிலும், மெதுவாக ஓடும் [[ஆறு]]களிலும் பார்க்கலாம். அல்லி இனத்தில் சுமார் 50 வகையான கொடிகள் உள்ளன. 2000 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த சங்க காலத்து இலக்கியங்களில் ஆம்பல் மலரைப்பற்றி பல குறிப்புகள் உள்ளன. அல்லி [[இரவு|இரவில்]] மலர்ந்து காலையில் குவியும் (இதழ்கள் மூடும்). [[தாமரை]] காலையில் மலர்ந்து இரவில் குவியும். [[எகிப்து|எகிப்தில்]] உள்ள [[நைல் ஆறு|நைல் ஆற்றில்]] பூக்கும் நீல நிற அல்லி இரவில் மலர்ந்து காலையில் குவியும் என்றாலும், அதே ஆற்றில் பூக்கும் வெண்ணிற அல்லி காலையில் மலர்ந்து இரவில் குவியும்.
==சங்கப்பாடல்கள் தரும் செய்தி==
அல்லி வையையில் மிதந்துவந்த்து. பரிபாடல் 12-78
தாமரையின் இதழ்களை அல்லி என்பர். தாமரை-அல்லி போல் தலைவியின் காலடி மென்மையானதாம். கல்லில் நடந்தால் அது கறுத்துப்போகுமாம். மெல்லியல் மேவந்த சீறடித் தாமரை அல்லிசேர் ஆய்இதழ் அரக்கு தோய்ந்தவை போலக் கல் உறின் அவ்வடி கறுக்கும் அல்லவோ - கலித்தொகை 13-12,
தாமரை-அல்லி இதழ் போன்றது உள்ளங்கை. தாமரைத் தாதின் அல்லி அவிர் இதழ் புரையும் மாசு இல் அம் கை - அகநானூறு 16-2,
ஆம்பல் மலரின் இதழையும், இலையையும் அல்லி என்பர். கணவனோடு வாழ்ந்தபோது ஆம்பல் அவன் தைத்துத் தந்த தழையாடைக்குப் பயன்பட்டது. அவன் மாய்ந்தபின் புல்லின்மேல் சோறுவைத்து உண்ணும் உண்கலமாக மாக அதன் அல்லி மாறிவிட்டது. புறநானூறு 248-5, அல்லி உணவின் மனைவி - புறநானூறு 250-5, சிறுவெள் ஆம்பல் அல்லி ஊண்ணும் கழிகல மகடூஉ - புறநானூறு 280-13
அல்லி காட்சி
பகன்றை மேல் படர்ந்திருந்த பாகல், கூதளம் ஆகிய மலர்கள் அல்லியைத் தொட்டுக்கொண்டு தொங்கினவாம். கருவிளை முரணிய தண்புதல் பகன்றை பெருவளம் மலர அல்லி தீண்டி .. பாகல் கூதளம் மூதிலைக் கொடி நிரைத் தூங்க - அகநானூறு 255-11,
ஒப்பனைப் பொருள்
நெற்றியில் திலகம், நெஞ்சில் அல்லிச்சாந்து, தோளில் தொய்யில், காலடியில் பஞ்சிக் குழம்பு, ஆகியவற்றைத் தலைவன் தலைவிக்கு இட்டு நலம்பாராட்டுவான். பல்லிதழ் எதிர்மலர் கிள்ளி வேறுபட நல்லிள வனமுலை அல்லியோடு அப்பி - அகநானூறு 389-5,
அல்லிய மாலை
அல்லி மாலை தொடுக்க உதவும். கலித்தொகை 91-1
மணிமேகலை ‘அல்லியங்கோதை’ என்று அன்மொழித் தொகையாகக் குறிப்பிடப்படுகிறாள். மணிமேகலை 10-78, மணிமேகலை 21-102
மணிமேகலை மேல் காதல் கொண்ட உதயகுமரன் ‘அல்லியந்தாரோன்’ எனக் குறிப்பிடப்படுகிறான். மணிமேகலை 21-28,
அல்லிக்கூத்து
அல்லிப்பாவை என்பது தோல்பொம்மை விளையாட்டு. வல்லோன் தைஇய வரிவனப்பு உற்ற அல்லிப்பாவை ஆடு வனப்பு ஏய்ப்பக் காம இருவர் ஆடல் - புறம் 33-17
அல்லி, தாமரை, திருமகள்
திருமால் மார்பில் மறுவாக இருப்பது அல்லி (திரு, தாமரையாள்) அல்லியம் திருமறு மார்ப - பரிபாடல் 1-38,
திருமால் ஆடல்
கண்ணபிரான் ஆடல்களில் ஒன்று அல்லியம் சிலப்பதிகாரம் 6-48
 
 
[[பகுப்பு:மலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது