மதிவாணர் நாடகத் தமிழர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: பகுப்பு:தமிழ் நாடக நூல்கள் ஐ மாற்றுகின்றது
No edit summary
வரிசை 1:
கி.பி. 60 முதல் 85 ஆம் ஆண்டு வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்து வந்த [[பாண்டியர்|பாண்டிய]] மன்னன் [[மதிவாணன்|மதிவாணனால்]] எழுதப்பட்ட இந்நூல் [[மறைந்த தமிழ் நூல்களின் பட்டியல்|மறைந்த தமிழ் நூல்களின் பட்டியலில்]] இடம்பெற்றுள்ள நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகின்றது. '''மதிவாணர் நாடகத் தமிழர்''' எனவும் '''நாடகத் தமிழ் நூல்''' எனவும் அழைக்கப்பட்டிருக்கலாம் என்பது பொதுவாக நிலவும் கருத்தாகும். இந்நூலின் சில பாடல்கள் [[சிலப்பதிகாரம்|சிலப்பதிகாரத்திற்கு]] உரை எழுதிய ஆசிரியரால் எடுத்துக் காட்டப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.இந்நூல் [[அகற்பா|அகற்பாவாலும்]],[[வெண்பா|வெண்பாவாலும்]] இயற்றப்பட்டது.மேலும் வெண்பா திறன் மிக்கவர்களாலே மட்டுமே பாடமுடியும். சிலப்பதிகார உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார் ஜந்து இசை நாடக நூல்கள் பற்றி எடுத்துக்காட்டி இந்நூலினையும் அவற்றுள் ஒன்றாகத் தேர்ந்தெடுத்தார்.இந்நூல் [[வசைக் கூத்து|வசைக் கூத்திற்கும்]],[[புகழ் கூத்து|புகழ் கூத்திற்கும்]] [[இலக்கணம்]] கூறுவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
==கூத்தநூலும் மதிவாணனார் நாடகத்தமிழ்நூலும்==
‘பதினெண் கூலமும் உழவர்க்கு மிகுக’ – இந்த அடி கொண்ட பாடலைக் கூத்தநூலார் பாடியது என ஓரிடத்திலும், மதிவாணனார் நாடகத்தமிழ்நூலில் உள்ளது என மற்றோரிடத்திலும் அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார்.
 
இதனால் கூத்தநூல் என்பதும், மதிவாணனார் நாடகத்தமிழ் என்பதும் ஒன்று என அறிஞர்கள் கருதுகின்றனர். <ref>மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு – பத்தாம் நூற்றாண்டு, 2005 பக்கம் 196 முதல்</ref>
 
[[பகுப்பு:மறைந்த தமிழ் நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/மதிவாணர்_நாடகத்_தமிழர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது