மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
{{Infobox Mandir
| name =
| image = Kapaleeswarar1.jpg
| image_alt =
வரிசை 32:
| website =
}}
[[படிமம்:Kapaleeswarar Gopuram.jpg|thumb|200px|கபாலீஸ்வரர் கோயில் கோபுரங்களில் ஒன்று]]
'''கபாலீசுவரர் கோவில் ''' (Kapaleeshwarar Temple ) [[இந்தியா|இந்திய]] மாநிலம்் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை|சென்னையில்]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] அமைந்துள்ள [[சிவன்|சிவனுடைய]] கோவில் ஆகும்.
==வரலாறு==
▲'''கபாலீசுவரர் கோவில் ''' (Kapaleeshwarar Temple ) [[இந்தியா|இந்திய]] மாநிலம்் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] தலைநகர் [[சென்னை|சென்னையில்]] [[மயிலாப்பூர்|மயிலாப்பூரில்]] அமைந்துள்ள [[சிவன்|சிவனுடைய]] கோவில் ஆகும். இங்குள்ள சிவனின் பெயர் '''கபாலீஸ்வரர்''' (சுருக்கமாக ''கபாலி'') என்றும் உடனுறை [[பார்வதி|அம்மனின்]] பெயர் '''கற்பகாம்பாள்''' என்றும் வழங்கப்படுகிறது. இக்கோவில் [[பல்லவர்]]களால் ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. [[இந்து]] [[தொன்மவியல்]]படி இங்கு பார்வதி [[மயில்]] உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
[[படிமம்:Kapaleeswarar Tank.jpg|thumb|250px|left|திருக்குளத்தின் எதிர்க் கரையிலிருந்து கபாலீஸ்வரர் கோயிலின் தோற்றம்]]
இன்றைய கோயில் அண்மைக் காலத்தில் கட்டப்பட்டதாயினும், கபாலீஸ்வரர் கோயில் மிகவும் வழமை வாய்ந்தது. மயிலாப்பூர் கடற்கரையோரத்தில் துறைமுகப் பட்டினமாக விளங்கிய காலத்தில் இக் கோயில் புகழ் பெற்று விளங்கியதாகத் தெரிகிறது. ஏழாம், எட்டாம் நூற்றாண்டுகளை அண்டிய [[பல்லவர்]] காலத்தில் [[சைவ சமயம்|சைவசமய]] மறுமலர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவரான [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]], மயிலை கபாலீஸ்வரர் மீது [[தேவாரம்|தேவாரப்]] பதிகங்களைப் பாடியுள்ளார். பிற்காலத்தில், 16 ஆம் நூற்றாண்டில் [[போத்துக்கீசர்]] இப்பகுதியைக் கைப்பற்றி இங்கே ஒரு கோட்டையைக் கட்டியபோது, மயிலாப்பூர் நகரத்தைக் கடற்கரையிலிருந்து உட்பகுதியை நோக்கித் தள்ளிவிட்டதுடன், இக் கோயிலையும் அழித்துவிட்டார்கள். பல பத்தாண்டுகள் கழிந்த பின்னரே இன்றைய கோயில் கட்டப்பட்டது.
==ஐதீகங்கள்==
[[படிமம்:Poompavai Koyil.jpg|thumb|200px|பூம்பாவை கோயில்]]
திருஞானசம்பந்தர் வாழ்ந்த காலத்திலே, சிவனேசச் செட்டியார் என்ற சைவர், தனது மகளான பூம்பாவை என்பவளைச் சம்பந்தருக்கு மணம் முடித்துக்கொடுக்க எண்ணியிருந்தார். ஆனால், ஒரு நாள் [[பாம்பு]] தீண்டி அப்பெண் மரணமாகவே, அப்பெண்ணை எரித்துச் சாம்பலை ஒரு பாத்திரத்தில் இட்டுப் பாதுகாத்து வந்தார். சம்பந்தர் மயிலாப்பூர் வந்தபோது, செட்டியார் அவரைச் சந்தித்து நிகழ்ந்த சம்பவங்களைக் கூறியதுடன், பெண்ணின் சாம்பல் கொண்ட பாத்திரத்தையும் அவரிடம் கொடுத்தார். சம்பந்தர் அப் பாத்திரத்தைக் கபாலீஸ்வரர் முன் வைத்து ஒரு தேவாரப் பதிகம் பாடி, அப்பெண்ணை உயிர்பெற்று எழ வைத்ததாகவும், அவளை அங்கேயே கோயிலில் தொண்டாற்றுமாறு சம்பந்தர் கூறிச் சென்றதாகவும் ஐதீகம். இன்றைய கபாலீஸ்வரர் கோயிலிலும் இப் பூம்பாவைக்கு ஒரு சிறு கோயில் இருப்பதைக் காணமுடியும். இக் கோயிலிலுள்ள நவராத்திரி மண்டபத்தில் பூம்பாவை வரலாறு, சுண்ணத்திலான [[சிலை]]கள் மூலம் விளக்கப்பட்டிருக்கின்றது.
வரி 43 ⟶ 50:
[[பகுப்பு:தமிழக கோவில்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டுக் கோயில்கள்]]
[[de:Kapaliswarar-Tempel]]
|