அன்னை பூபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Removed category "அகிம்சாவாதிகள்" (using HotCat)
சி +விரிவு
வரிசை 28:
 
==இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை==
அன்னையர் முன்னணியின் கோரிக்கைகள் எதுவுமே இந்தியப்படையினரின் கவனத்தை ஈர்க்கவில்லை. ஆனால் தமிழ்ப் பெண்கள் அடையாள உண்ணாநோன்புப் போராட்டத்தில் அணி திரண்ட நிலையில் [[1988]]ம் ஆண்டு [[ஜனவரி 4]] ம் திகதி அன்னையர் முன்னணியைத் திருமலைக்குப் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. போராட்டம் தொடர்ந்து நடந்தது. 1988 ம் ஆண்டு [[பெப்ரவரி 10]] ஆம் தேதி அன்னையர் முன்னணியின் நிர்வாகக் குழுவினர் [[கொழும்பு|கொழும்பில்]] இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை முறியவே சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தைத் தொடக்கத்தொடங்க முடிவு எடுத்தனர்.
 
==உண்ணாநிலைப் போராட்டம்==
அப்போது பலர் சாகும் வரை உண்ணாநோன்புப் போராட்டத்தில் குதிப்பதற்காக முன்வந்தனர். இறுதியில் குலுக்கல் முறையில் தேர்வு இடம் பெற்றது. முதலில் ''அன்னம்மா டேவிட்'' தெரிவு செய்யப்பட்டார். 1988ஆம் ஆண்டு [[பெப்ரவரி 16]] ஆம் நாள் [[அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயில்|அமிர்தகழி மாமாங்கேஸ்வர் கோயிலில்]] அன்னம்மாவின் உண்ணாநோன்புப் போராட்டம் தொடங்கியது. ஆனால் படையினர் உண்ணாவிரத மேடையில் இருந்தவரைக் கடத்திச் சென்றதில் அவரால் தனது போராட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை.
 
==பூபதிஅன்னைபூபதி போராட்டத்தில் குதிப்பு==
இந்த நிலையில் தான் பூபதியம்மாள் தன் போராட்டத்தை [[மார்ச் 19]] [[1988]] இல் தொடங்கினார். முன்னெச்சரிக்கையாக "சுயவிருப்பின் பேரில் உண்ணாவிரதமாயிருக்கிறேன். எனக்கு சுயநினைவிழக்கும் பட்சத்தில் எனது கணவனோ, அல்லது பிள்ளைகளோ என்னை வைத்தியசாலையில் அனுமதிக்க முயற்சிக்கக் கூடாது" எனக் கடிதம் எழுதி வைத்தார்.பத்துப்பிள்ளைகளுக்கு, தாயார் இவர்.நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணாநோன்பு இருந்தார். கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று உயிர் நீத்தார்.
 
அன்னை பூபதியின் நினைவுநாள் [[தமிழீழ நாட்டுப்பற்றாளர் நாள்]] என்றும் நினைவு கூறப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அன்னை_பூபதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது