சென்னை அணுமின் நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: de, fr, it, mr, no, ru
சி *விரிவாக்கம்*
வரிசை 22:
|as_of = சூலை 24, 2007
}}
'''சென்னை அணுமின் நிலையம்''' (''Madras Atomic Power Station'') அல்லது '''கல்பாக்கம் அணுமின் நிலையம்''' [[இந்தியா]]வில் [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] [[சென்னை]]யில் இருந்து சுமார் 80 கிலோமீட்டர் தொலைவில் [[கல்பாக்கம்|கல்பாக்கத்தில்]] அமைந்துள்ள [[அணு ஆற்றல்]] நிலையமாகும். ‎<ref>'^ 'http://www.npcil.nic.in/main/AboutUs.aspx</ref>இந்தியாவில் நிலைகொண்டுள்ள இதர அணு ஆற்றல் ஆலைகளைப் போலவே, சென்னை அணுமின் நிலையமும் இந்திய அரசின் அணு ஆற்றல் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் [[இந்திய அணுமின் கழகம்|இந்திய அணுமின் கழக]] நிருவாகத்தின் கீழ் செயல் பட்டு வருகிறது.<ref>‎^ Plants in Operation (Company website)‎</ref>இத்திட்டத்தின் பணிகள் 1970 ஆம் ஆண்டில் துவங்கின.
சென்னை அணுமின் நிலையம் முற்றிலும் இந்திய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுத்திய முதல் அணு ஆற்றல் நிலையம் ஆகும். இந்த ஆலை [[புளுத்தோனியம்]] என்ற அணுக்கருவை எரிபொருளாக பயன்படுத்துவதாகும். இந்த எரிபொருளை இங்கு தயாரிக்கும் வசதியுடன், இவ்வாலை அமைந்துள்ளது. எரிபொருளை மீண்டும் பதப்படுத்தும் வசதி, கழிவுப்பொருட்களை பதப்படுத்தும் வசதி, ஆகிய அனைத்து வசதிகளும் ஒருங்கிணைந்து அமைக்கப்பெற்ற பெருமைக்குரிய அணுசக்தியில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யும் ஆலையாகும். இந்த ஆலை இந்திய அறிவியல் வல்லுனர்கள் வடிவமைத்த [[வேக ஈனுலை]] (''Fast breeder reactor'') வகை சார்ந்த 440 மெகா வாட் திறனுடன் கூடிய இரு அணு உலைகளை கொண்டுள்ளது. இவ்வாலையை முழுமையான பாதுகாப்புடன் செயல்படுத்தும் நோக்குடன் இவ்வாலையை சுற்றிலும் இரு ஓடுகள் கொண்ட கனமான தடுக்கும் சுவர்கள் எழுப்பியுள்ளார்கள். ஈயத்தால் ஆன இச்சுவர்கள், ஆலைக்குள் இயங்கும் கதிரியக்கத்தில் ஏற்படும் எதிர்பாராத கசிவுகளை ஆலைக்கு வெளியே வரவிடாமல் தடுத்து வெளி உலகத்திற்கு பாதுகாப்பு அளிக்க அமைத்ததாகும்.
"https://ta.wikipedia.org/wiki/சென்னை_அணுமின்_நிலையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது