ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
ஸகர உயிர்மெய்கள் வரும் சொற்களைத் [[தனித்தமிழ்]] நடையில் எழுதும்போது ஸகரத்தைச் [[ச்|சகரமாக]] எழுதுவது பெருவழக்கு. மொழிக்கு முதலில் ஸகர உயிர்மெய் வரும்போது [[தனித்தமிழ்]] நடையில் அதனைச் சகர உயிர்மெய்யாக எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஸரஸ்வதி-சரசுவதி, ஸிம்பாப்வே-சிம்பாப்வே).
 
சொல்லொன்றின் இடையில் அல்லது இறுதியில் ஸகர உயிர்மெய் வந்தால் அதனைச் [[ச்|சகரமாக]] எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: நாஸா-நாசா). சில இடங்களில் [[த்|தகரமாக]] எழுத வேண்டும் (எடுத்துக்காட்டு: வாசனை-வாதனை).
 
மொழிக்கு முதலில் ''ஸ்'' வந்தால் முன்னே ஓர் உயிரெழுத்தைச் சேர்த்து (அகரம், இகரம், உகரம், எகரம்) ''ஸ்'' எழுத்தைச் ''சு'' எழுத்தாக்கி எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: ஸ்பானியா-எசுப்பானியா, ஸ்க்கைப்-இசுக்கைப்பு). சில இடங்களில் ''சி'' எழுத்தாக்கியும் எழுதப்படும் (எடுத்துக்காட்டு: ஸ்நேகம்-சிநேகம்). முன்னே உயிரெழுத்துச் சேர்க்க வேண்டிய தேவையின்றியும் சில இடங்களில் வருவதுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்வாமி-சுவாமி). இலங்கை வழக்கின்படி ''ஸ்'' எழுத்தை நீக்கி விடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்டர்ம்-தேம்). இவை தவி வேறு விதங்களிலும் திரிபு இடம்பெறுவதுண்டு (எடுத்துக்காட்டு: ஸ்வாமி-சாமி). சொல்லின் இடையில் ''ஸ்'' வந்தால் அதனைச் ''சு'', ''சி'' ஆகியவற்றால் குறிப்பிடுவதுண்டு (எடுத்துக்காட்டு: அரிஸ்ட்டாட்டில்-அரிசுட்டாட்டில், அரிசிட்டாட்டில்). சில வேளைகளில் அதற்குப் பின்வரும் எழுத்தின் மெய்யெழுத்தை ''ஸ்'' எழுத்திற்குப் பதிலாக இடுவதுமுண்டு (எடுத்துக்காட்டு: கிறி்ஸ்தவம்-கிறித்தவம்). சில இடங்களில் ''ஸ்'' ஆனது ''ற்'' ஆகத் திரிவதுமுண்டு (எடுத்துக்காட்டு: சமஸ்கிருதம்-சமற்கிருதம்).<ref>[http://tamilvu.org/slet/lA100/lA100pd4.jsp?bookid=208&pno=15 எழுத்தியல்]</ref> சொல்லொன்றின் இறுதியில் ''ஸ்'' வருமாயிருந்தால் அதனைச் ''சு'' என்று எழுத வேண்டும் (எடுத்துக்காட்டுகள்: விண்டோஸ்-விண்டோசு, பஸ்-வசு).
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது