சலாகுத்தீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்* |
|||
வரிசை 1:
{{Infobox Monarch
| name =சலாகுத்தீன் அல்லது சலாதீன்
| title =[[எகிப்து]] மற்றும் [[சிரியா]]வின்
| image =[[படிமம்:Standbeeld_Saladin_Damascus.JPG|240px]]
| caption =டமாசுகசில் உள்ள சலாவுத்தீனின் சிலை
வரிசை 18:
|}}
'''சலாகுத்தீன் அய்யூப்''' (''Yusuf Salahuddin ibn Ayyub'', 1137 - மார்ச் 4, 1193, [[அரபு மொழி|அரபு]]: صلاح الدين يوسف بن أيوب; [[குர்தி மொழி|குர்தி]]: سهلاحهدین ئهیوبی) என்பவர் மேற்கத்திய நாடுகளில் 'சலாதீன்' (''Saladin'') என அழைக்கப்படும் பிரபல [[இசுலாம்|இசுலாமிய]]ப் பேரரசர் ஆவார். இவரது பேரரசு
== இளமைக்காலம் ==
யூசுப் சலாகுத்தீன் இப்னு அய்யூப் 1137-ம் ஆண்டு [[இராக்]]கிலுள்ள திக்ரித் நகரில் பிறந்தார்<ref>[http://www.history.com/encyclopedia.do?articleId=221342 History - Saladin]</ref>. குர்திய இசுலாமிய பின்புலத்தைக் கொண்ட இவரது குடும்பம், [[ஆர்மீனியா|அர்மீனியா]]விலுள்ள டிவின் நகரில் இருந்து புலம்பெயர்ந்து அங்கு வந்திருந்தது. இவரது தந்தை நசிமுத்தீன் அய்யூப். இவர் தனது குடும்பத்தை திக்ரித் நகரில் இருந்து மோசுல் நகருக்கு மாற்றினார். அங்கு
== பேரரசை நிறுவுதல் ==
=== எகிப்து ===
[[படிமம்:Saladdin Empire.PNG|left|சலாகுத்தீன் உட்சத்தில்
சலாகுத்தீன் சிரியப் படைகளில் சேர்ந்தபொழுது செருசலேம் முதலாவது அமல்ரிக் என்ற இலத்தீன் கிறித்தவரால் ஆளப்பட்டது. இவர் தனது கட்டுப்பாட்டின் கீழ் எகிப்தைக் கொண்டுவரும் பொருட்டு, அதன் மீது பல தடவை படையெடுத்தார். அப்போது எகிப்தைப் பாத்திம கலிபாக்கள் வழிவந்த ‘சாவார்’ என்ற மன்னர் ஆண்டு வந்தார். சாவாருக்கு ஆதரவாகப் படையெடுத்து வந்த சிரிய தேசத்துப் படைக்கு சலாவுத்தீனின் சிறிய தந்தை ஆசாத்துல் சீர்க் தலைமை தாங்கினார். இவரே சலாகுத்தீனைச் சிரியப் படையில் சேர்த்துவிட்டவர் ஆவார். இந்நிலையில் சீர்க்கின் மறைவு மற்றும் சாவாரின் அதிகாரக்குறைவு காரணமாக 1169-ம் ஆண்டு சலாகுத்தீன், சிரிய மற்றும் பாத்திம கலிபாக்களின் கூட்டுப்படைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். தனது 31வது வயதில் இந்த நிலைக்கு வந்த சலாகுத்தீன், தனது நிர்வாகத் திறைமை, போர்முறைகள் மற்றும் பயமறியா குணம் ஆகியவற்றின் காரணமாக எகிப்து நாட்டின் தலைவராக மாறினார். இவரே [[சன்னி இசுலாம்|சன்னி இசுலாத்தை]] எகிப்தில் பரப்பியவர். இதன் பிறகு 1171-ம் ஆண்டு ஏற்பட்ட கலிபாவின் மரணத்தைத் தொடர்ந்து, இவர் எகிப்தின் பேரரசராக முடிசூட்டப்பட்டார். இவரின் ஆட்சியின் கீழ், எகிப்தின் படை பலம் மற்றும் பொருளாதாரம் வேகமாக பெருகியது.<br />
வரிசை 33:
[[படிமம்:Saone.jpg|right|thumb|சலாகுத்தீனின் கோட்டை, சிரியா]]
இவ்வாறு 1174-ம் ஆண்டு நூறுதீனின் மரணத்திற்குப் பிறகு, சலாகுத்தீனின் படைகள் டமாசுக்கசு நகருக்குள் நுழைந்தன. அங்கு சிரிய மக்கள் சலாகுத்தீனையும் அவரது படைகளையும் வரவேற்றனர். பின்பு தனது முன்னால் மன்னரான நூறுதீனின் விதவை மனைவியான இசுமத் உல்தீன் காத்துன் என்பவரை மறுமணம் புரிந்து கொண்டார். இதன் மூலம் சுலபமாக சிரிய நாட்டைத் தனது
இவர் சிரியாவை ஆண்ட காலத்தில் பலமுறை சிலுவைபோர்களைச் சந்தித்தார். ஒவ்வொரு முறையும் இவர் எதிரிப் படைகளை முறியடித்து ஐரோப்பாவிற்குத் திருப்பி அனுப்பினார். ஆனால் 1177-ம் ஆண்டு நவம்பர் 25-ம் நாள் நடைபெற்ற போரில் மட்டும் இவர் தோல்வியுற்றார். இந்தப் போரில் செருசலேம் நகரை ஆண்ட நாலாம் பால்டுவின் மற்றும் ரோனால்டு ஆகியோரின் கூட்டுப்படையை எதிர்கொண்ட இவர், இறுதியில் தோல்வியுற்று தனது படையில் பத்தில் ஒரு பகுதி வீரர்களோடு எகிப்து திரும்பினார்.
வரிசை 45:
== செருசலேம் கைப்பற்றப்படல் ==
இதன் பிறகு [[ஜெரூசலம்|செருசலேம்]] நகரை முற்றுகையிட்ட சலாகுத்தீனின் படை, அங்கு உள்ள பிரென்சு படைகளைச் சரணடையும்படி கேட்டுக்கொண்டது. அவர்கள் அதை மறுக்கவே 1187-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் நாள் கோட்டையை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர். ஆனபோதிலும் சலாகுத்தீன் அங்கு பிடிபட்ட வீரர்களையும், மக்களையும் துன்புறுத்தாமல் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வழி செய்தார்<ref>http://books.google.com/books?id=7CP7fYghBFQC&pg=PA1101&dq=saladin+balian+jerusalem+siege+-wikipedia+-%22Kingdom+of+Heaven%22+destroy+temple+mount&sig=lu0RI7bOVMyPYmxqHXVUiaWTkkw#v=onepage&q=saladin%20balian%20jerusalem%20siege%20-wikipedia%20-%22Kingdom%20of%20Heaven%22%20destroy%20temple%20mount&f=false</ref>. இதன் பிறகு சிலுவைப்போராளிகளின் வசம் எஞ்சி இருந்தது டயர் என்ற நகரம் மட்டுமே.இதை காண்ரட் என்பவர் ஆட்சிசெய்துகொண்டு இருந்தார். மேலும் சலாகுத்தீனால் விடுதலை செய்யப்பட்ட லூசிஞ்ன் கையும் தனது மனைவியுடன் இங்குதான் வசித்து வந்தார். இதன் மீது 1188 -ம் ஆண்டு படையெடுத்த சலாகுத்தீன், இதையும் கைப்பற்றினார். இவ்வாறு அனைத்து சிலுவைப்போராளிகளின் பகுதிகளையும் கைப்பற்றிய சலாகுத்தீன், ஒரு முழுமையான பேரரசாக அயூபி பேரரசை மாற்றினார். இவ்வாறு ஒரு முழுமையான இசுலாமியப் பேரரசின் கீழ் செருசலேம் நகரை கொண்டுவந்தபொழுதும் கூட, அங்கு வாழ்ந்த யூத மக்களைத் தொடர்ந்து செருசலேம் நகரிலேயே வாழ அனுமதித்தார்<ref> Scharfstein and Gelabert, 1997, p. 145. </ref>.
== மூன்றாம் சிலுவைப்போர்கள் ==
இவ்வாறு செருசலேம் நகர் முழுவதுமாக சலாகுத்தீன் கையில் வந்த பிறகு, அதை மீண்டும் மீட்க மூன்றாம் சிலுவைப்போர்கள் தொடங்கப்பட்டன. இதை [[இங்கிலாந்து]] மன்னரான முதலாம் ரிச்சர்ட் தலைமையேற்று நடத்தினார். இந்தப் போர் 1191-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் நாள் அர்சுப் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் ரிச்சர்ட்டின் படைகள் எவ்வளவோ முயன்றும் கூட, செருசலேம் நகரைக் கைப்பற்ற முடியவில்லை. இதிலும் இறுதியில் சலாகுத்தீனே வெற்றிபெற்றார்.
இருப்பினும் சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவருக்கும் இடையில் இருந்த நட்புறவு தனித்தன்மையானது. இந்த நட்பு சகமனித மரியாதைக்கும், போர் நெறிமுறைகளுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது. ரிச்சர்ட் ஒரு முறை நோய்வயப்பட்ட பொழுது, சலாகுத்தீன் அவரைக் குணப்படுத்த தனது அந்தரங்க மருத்துவரை அனுப்பியத்தோடு பழவகைகளையும் கொடுத்தனுப்பினார்<ref> http://www.islamkalvi.com/portal/?p=220</ref>. மேலும் அர்சுப் போர்க்களத்தில் ரிச்சர்ட்டின் குதிரை இறந்தததைக் கேள்விப்பட்ட சலாகுத்தீன், அவருக்கு உயர் ரக குதிரைகள் இரண்டைக் கொடுத்தனுப்பினார். இதன் பிறகு ரிச்சர்டின் தங்கை ‘சோன்’ என்பவளை சலாகுத்தீன் தனது தம்பிக்கு மணமுடித்து வைத்தார். இதன் மூலம் முசுலிம் மற்றும் கிறித்தவர்கள் இடையே நட்புறவு ஏற்பட வழிவகுத்தார். இவ்வளவுக்கும் சலாகுத்தீன், ரிச்சர்ட் இருவரும் ஒருவரையொருவர் நேரில் சந்தித்ததே இல்லை. கடிதம் மற்றும் தூதர்கள் மூலம் மட்டுமே பரிவர்த்தனை நடைபெற்றது.
இதன் பிறகு 1192-ம் ஆண்டு சலாகுத்தீன் மற்றும் ரிச்சர்ட் ஆகிய இருவரும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தனர். ராம்லா ஒப்பந்தம் என அழைக்கப்படும் இதன் படி செருசலேம் முசுலிம்கள் வசமே தொடர்ந்தது. மேலும் கிறித்தவர்களும் அங்கு உள்ள புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டனர்<ref> Jonathan Phillips, The Crusades, 1095-1197 (New York: Pearson Education Limited, 2002) pg 150.</ref>.
== மறைவு ==
[[படிமம்:Damascus-SaladinTomb.jpg|thumb|right|சலாவுத்தீனின் சமாதி]]
இவ்வாறு ராம்லா உடன்படிக்கையைத் தொடர்ந்து ரிச்சர்ட் அரேபியாவை விட்டு வெளியேறிய பின் 1193-ம் ஆண்டு மார்ச் 4-ம் நாள் [[டமாசுக்கசு]] நகரில் நோய்வயப்பட்டு சலாகுத்தீன் இறந்தார். இவ்வாறு இறந்த பிறகு அவரை அடக்கம் செய்ய அவரது குடும்பத்தில் போதிய பணம் இல்லை<ref> Bahā' al-Dīn (2002) pp 25 & 244. </ref>. காரணம் இவர் தனது செல்வம் முழுவதையும் தானம் செய்வத்திலேயே செலவிட்டதே ஆகும். இவ்வாறு அவரது உடல் டமாசுக்கசு நகரில் உள்ள பிரபலமான [[உமய்யா மசூதி]]யின் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
ஏழு நூற்றாண்டுகளுக்குப் பிறகு [[ஜெர்மனி|செருமனி]]யை சேர்ந்த பேரரசரான இரண்டாம் வில்லியம் ஒரு சலவைக்கல் சமாதி மேடையை சலாகுத்தீனுக்காக உருவாக்கினார்<ref> Riley Smith, Jonathan, "The Crusades, Christianity and Islam", (Columbia 2008), p. 63-66 </ref>. இதுவே இன்றளவும் சலாகுத்தீனின் சமாதியாக மக்களால் பார்க்கப்படுகின்றது. ஆனால் உண்மையான சமாதி வேறு இடத்தில் மரத்தால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மீதே சலவைக்கல் மேடையை அமைக்காததற்கு காரணம், அவரைத் தொந்தரவு செய்ய விரும்பாதததே ஆகும். அந்த அளவிற்கு அவர் மக்களிடம் மட்டுமல்லாமல் எதிரிகளிடமும் நன்மதிப்பை பெற்றிருந்தார்.
|