முதியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"முதியர் என்போர் சங்க கால..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
06:58, 10 மே 2012 இல் நிலவும் திருத்தம்
முதியர் என்போர் சங்க காலக் குடிமக்கள். முதுமலைக் காட்டுப் பகுதியில் வாழ்ந்தமையால் இவர்கள் முதியர் எனப்பட்டனர்.
பல்யானைச் செல்கெழு குட்டுவன் இவர்களோடு நட்புறவு கொண்டு, அவர்களுக்குத் தன் நாட்டின் ஒரு பகுதியைப் பங்கிட்டுத் தந்து ஆளச் செய்தான். மதி உறழ் மரபின் முதியரைத் தழீஇக் கண்ணகன் மரபின் மண் வகுத்து ஈத்து பதிற்றுப்பத்து பதிகம் 3-4
ஆண்டால் மூத்தவரை முதியவர் என்கிறோம். அறிவில் மூத்த பெரியவர்களைத் திருவள்ளுவர் முதுவர் என்கிறார். [1] ஆண்டில் மூத்தவரையும் இளையவரையும் குறிக்க ‘உறுவர்’. ‘சிறுவர்’ என்னும் சொற்கள் சங்க காலத்தில் வழக்கத்தில் இருந்தன. [2]
சிறுவர், இளையர், முதியர் என்னும் சொற்களும் பருவ நிலைகளைக் குறிக்கச் சங்க கால நூல்கள் பயன்படுத்தியுள்ளன. [3]