வைக்கம் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
தண்டனைக்காலம் முடிவடைந்த பின்பு ஈ. வே. ராமசாமி நாயக்கர் விடுதலையானார். விடுதலையான ஒரு வாரத்தில் மறுபடியும் கைது செய்யப்பட்டார். அதன் பிறகு ஆறு மாத காலம் தண்டனை அளிக்கப்பட்டு திருவாங்கூர் மத்தியச் சிறையில் கடினக் காவல் கைதியாகவும் வைக்கப்பட்டார். இந்த தண்டனைக் காலத்தில் நான்கு மாத காலத்தில் அரசர் இறந்து போனார். இதனால் அரச விளம்பரத்தின் அடிப்படையில் ஈ. வே. ராமசாமி நாயக்கர் விடுவிக்கப்பட்டார். விடுதலையான ஈ. வே. ராமசாமி நாயக்கர் பின்னர் அங்கிருந்து ஈரோட்டிற்குத் திரும்பி விட்டார்.
 
காங்கிரசு பேரியக்கத்தின் இந்தியத் தலைவர்கள் பலர் கலந்து கொண்டும் பிரச்சனை முடிவடையாததால் போராட்டம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. காங்கிரசு பேரியக்கத்திற்கு இந்த அறவழிப் போராட்டம் ஒரு சவாலான போராட்டமாகவே நடந்து கொண்டிருந்தது. இந்தப் போராட்டம் ஓராண்டுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. இதனால் மகாத்மா காந்தி [[1925]] ஆம் ஆண்டு [[மார்ச் 9]] அன்று வைக்கம் போராட்டத்திற்குச் சென்றார்.
 
அதன் பின்னரும் இந்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. பல்வேறு தலைவர்களின் போராட்டங்களுக்கும், பேச்சுகளுக்கும் பின்னால் 1925 ஆம் ஆண்டின் நவமபர் மாதத்தில் போராட்டம் முடிவுக்கு வந்தது. அகிம்சை எனும் அறவழியில் போராடி வெற்றி கண்ட போராட்டம் இதுதான்.
இந்நிலையில் மகாத்மா காந்தி ஸ்ரீ நாராயணகுருவை அவரது சிவகிரி ஆசிரமத்தில் சந்தித்துப் பேசினார். தீண்டாமை ஒழிப்பு குறித்து இருவரும் பேசிக் கொண்டனர்.
 
==வைக்கம் போராட்டத்தில் பங்கு பெற்ற தலைவர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வைக்கம்_போராட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது