[[File:Our lady of snows basilica.JPG|thumb|200px|right|தூத்துக்குடியிலுள்ள பனிமய மாதா பேராலயம்]]
"'''பனிமய மாதா பேராலயம்"''' (''Lady of Snows basilica'') [[தூத்துக்குடி|தூத்துக்குடியில்]] அமைந்துள்ள உரோம கத்தோலிக்க தேவாலயமாகும். இப்பேராலயம் 16ஆம் நூற்றாண்டில் [[போர்த்துகல்|போர்த்துகிசிய]] பாணியில் கட்டப்பட்டதாகும். 1982ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் 400ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு [[போப்பாண்டவர்|போப்]] [[போப் ஜான் பால் II|இரண்டாம் ஜான் பால்]] இத்திருத்தலத்தைப் பேராலயமாக தனது இறைக் கடிதமான "Pervenute illa Dei Beatissimae Genitricis Effigies"இல் அறிவித்தார்.