கழுத்திரு (அணிகலன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"[[படிமம்:Kaluthiru.JPG|thumb|right|கழுத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

15:04, 25 சூன் 2012 இல் நிலவும் திருத்தம்

கழுத்திரு (நகரத்தார் தாலி) என்பது நாட்டுக்கோட்டை நகரத்தார் (நாட்டுக்கோட்டை செட்டியார்) இனத்தில் நடைபெறும் திருமணம் அல்லது சாந்திக் கல்யாண (சஷ்டியப்த பூர்த்தி) நாளன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் கழுத்து அணிகலன் ஆகும். மணமகன் அணிந்துகொள்ளும் அணிகலன் கௌரி சங்கம் என்று அழைக்கப் படுகிறது.

கழுத்திரு (நகரத்தார் தாலி)

செட்டிநாட்டுத் திருமணங்கள்

சிவகங்கை மாவட்டத்தில், காரைக்குடியை மையமாகக் கொண்டு நகரத்தார் சமூகத்தினர் வசிக்கின்ற சுமார் 96 கிராமங்களை ((தற்போது 75 கிராமங்களாகக் குறுகிவிட்டது) உள்ளடக்கியது செட்டிநாடு. செட்டிநாடு பற்றியும் நகரத்தார் என்று குறிக்கப்படும் மக்கள் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டிய செய்திகள் நிறைய உண்டு. நகரத்தார் திருமண வைபவங்கள், பல நாட்கள் நடைபெறும். வகைவகையான விருந்துகள், ஏராளமான சடங்கு, சம்பிரதாயங்கள் உண்டு. இந்த இனத்தவர் திருமணங்கள் பெரும்பாலும் பெண் வீட்டில்தான் நடைபெறும். செட்டிநாட்டில் நகரத்தார் திருமணங்களில் முக்கிய இடம் வகிக்கும் அணிகலன்கள் இரண்டு: ஒன்று கழுத்திரு மற்றொன்று கௌரி சங்கம்.[1] [2]

கழுத்திரு (நகரத்தார் தாலி)

கழுத்திரு என்பதன் பொருள் என்ன? ஒரு பொருள் கழுத்தில் அணியும் மங்கல சங்கிலி. மற்றொரு பொருள் கழுத்தில் திரு என்ற இலக்குமியை அணிவித்தல் ஆகும். கழுத்திரு என்பது இரட்டைவடச் சங்கிலியும் அதனுடன் கோர்த்து இணைத்துள்ள 34 வகையான கைவேலைப்பாட்டுடன் கூடிய அழகிய துணை நகைகளாகும். இவற்றுள் இரண்டு தொங்கட்டான்கள் (பெண்டன்ட்கள்) மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகின்றன. இந்த தொங்கட்டான்களில் ஒரு பக்கம் தேவி இலக்குமியின் உருவமும் மறு பக்கம் காளை வாகனத்தில் அமர்ந்து காட்சி தரும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் உருவமும் பொறிக்கப்பட்டிருக்கும். தேவி இலக்குமி மற்றும் ரிஷபாருடர் உருவங்கள் செட்டிநாட்டில்.மிகவும் விரும்பி நகைகளில் பதிக்கப்படும் திருவுருவங்கள் ஆகும். இத்திருவுருவங்கள், மணமக்களுக்கு இறைவன் எல்லா நலன்களையும் அளித்துக் காப்பான் என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு பொறிக்கப்படுகின்றன.

இரண்டு தலைமுறைகளுக்கு முன்பு கெட்டிக் கழுத்திரு என்ற இந்த அணிகலனை 100 பவுன் தங்கத்தில் செய்வார்களாம். (பவுன் விலை பதிமூன்று ரூபாய் இருந்தகாலம் அது.). இது போல கழுத்திரு நகைகள் ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு முதல் நான்கு உருப்படிகள் வைத்திருப்பார்களாம். மணப்பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்து அப்பெண்ணுக்கு திருமணம் நடைபெறும் சமயம் தாய் தன பெண்ணுக்குக் இந்தக் கழுத்திருவை அணிவிப்பது வழக்கம். ஒன்றுக்கு மேல் பெண் குழந்தைகள் உள்ள வீடுகளில் மொத்தக் கழுத்திருவையும் அழித்து பின் தேவைக்கேற்ப பிரித்து புதுப்புதுக் கழுத்துருக்களாகச் செய்து கொள்வது வழக்கம். எனவே நாளடைவில் கெட்டிக் கழுத்திரு அளவில் குறைந்து 11 முதல் 16 பவுன் அளவில் சிறிய கழுத்திருக்களாக உருமாறி வருகின்றன.[3]

கௌரி சங்கம்

கௌரி சங்கம் என்பது மணமகன் (ஆண்கள்) அணியும் அணிகலன் ஆகும். கௌரி சங்கம் என்பது ருத்திராட்ச மாலையாகும். இந்த கௌரி சங்கத்தில் இணைக்கப்பட்டுள்ள தொங்கட்டான் (பெண்டன்ட்) மட்டும் 25 பவுன்கள் தேறும். இந்தத் தொங்கட்டானில் ரிஷபாருடர் (ரிஷப வாகனத்தில் சிவசக்தி சமேதராக அமர்ந்திருக்கும் வடிவம்) பொறிக்கப்பட்டிருக்கும்.

உள்ளிணைப்புகள்

  1. நாட்டுக்கோட்டைச் செட்டியார்
  2. செட்டிநாடு

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=கழுத்திரு_(அணிகலன்)&oldid=1146710" இலிருந்து மீள்விக்கப்பட்டது