எயித்தியப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *திருத்தம்*
சி →‎பின்புலம்: *விரிவாக்கம்*
வரிசை 25:
==பின்புலம்==
[[கரிபியன்|கரிபியன் தீவுகளின்]] செல்வச்செழிப்பு ஐரோப்பிய [[சர்க்கரை]]த் தேவைகளைச் சார்ந்து இருந்தது. இங்கிருந்த [[கரும்பு]]த் தோட்ட உரிமையாளர்கள் வட அமெரிக்காவிலிருந்து மளிகைகளையும் ஐரோப்பாவிலிருந்து தொழிற் பொருட்களையும் வாங்க சர்க்கரை ஏற்றுமதியை நம்பி இருந்தனர். இத்தீவில் காப்பி, கோக்கோ, பருத்தித் தோட்டங்களும் இருந்தபோதிலும் அவை இலாபமீட்டுபவையாக இல்லை.<ref name="Thomas E. Weil 1985">Thomas E. Weil, Jan Knippers Black, Howard I. Blustein, Kathryn T. Johnston, David S. McMorris, Frederick P. Munson, ''Haiti: A Country Study''. (Washington, D.C.: The American University Foreign Area Handbook Series 1985).</ref> 1730களில் பிரெஞ்சு பொறியாளர்கள் சிக்கலான [[நீர்ப்பாசனம்|நீர்ப்பாசன]] அமைப்புகளை உருவாக்கியதால் கரும்பு உற்பத்தி பெருகியது. 1740களில் செயிண்ட்-டொமிங்குவும் [[ஜமைக்கா]]வும் உலக சர்க்கரை உற்பத்தியில் முதன்மையாளர்களாக விளங்கின. சர்க்கரை உற்பத்திக்கு மனித உழைப்பு மிகவும் தேவையாக இருந்தது; இதற்கு ஆபிரிக்க அடிமைகளைப் பயன்படுத்தி வந்தனர். சிறுபான்மையினராகவும் மிகுந்த செல்வந்தர்களாகவும் விளங்கிய வெள்ளைக்கார தோட்ட உரிமையாளர்கள் தங்களை விட பத்து மடங்கு பெரும்பான்மையான கருப்பர்களின் எதிர்ப்பை எதிர்பார்த்து அஞ்சினர். <ref name="brief">{{cite book|first=Jan|last=Rogozinski|year=1999|title=A Brief History of the Caribbean|edition=Revised|publisher=Facts on File|location=New York|pages=85, 116–117, 164–165|isbn=0-8160-3811-2}}</ref><ref name="kreyol-004">{{cite web|url= http://www.kreyol.com/history004.html|title=The Slave Rebellion of 1791|accessdate=27 November 2006}}</ref>இதனால் அடித்து கொடுமைப்படுத்தி கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முயன்றனர். அடிமைகள் இட்ட கட்டளையை மீறினாலோ தப்பி ஓடினாலோ அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் ஓர் படிப்பினையாக இருக்குமாறு கொடுமையான கசையடிகளுக்கு ஆட்படுத்தப்பட்டனர். இது சில நேரங்களில் விரை நீக்கம், கொளுத்துதல் வரை சென்றது. பிரெஞ்சு மன்னர் [[பதினான்காம் லூயி]] இக்கொடுமைகளைக் கட்டுப்படுத்தும் வகையில் ''கோட் நாய்ர்'' என்ற ''கருப்பு விதியை'' கொணர்ந்தார். ஆனால் இதனை தோட்டக்காரர்கள் மீறியதோடன்றி உள்ளூர் சட்டங்களால் இவற்றை மாற்றினர். <ref name="Laurent Dubois 2004">Laurent Dubois, ''Avengers of the New World: The Story of the Haitian Revolution''. (Cambridge, Massachusetts: The Belknap Press of Harvard University Press 2004).</ref>
1758இல் வெள்ளை உரிமையாளர்கள் இயற்றிய சட்டங்களால் ஓர் சாதிப் பிரிவினை உருவானது. முதல்நிலையில் வெள்ளை குடியேற்றவாதிகள், ''பிளாங்க்குகள்'', இருந்தனர். அடுத்த நிலையில் ''முலட்டோக்கள்'' அல்லது ''சுதந்தர கருப்பர்கள்'' (gens de couleur libres) இருந்தனர். இவர்கள் கல்வியறிவு, படைப்பயிற்சி பெற்றவர்களாகவும் அடிமைப்படாதவர்களாகவும் இருந்தனர். பெரும்பாலனவர்கள் வெள்ளை உரிமையாளருக்கும் அவரிடம் அடிமைப்பட்டிருந்த கருப்பினப் பெண்களுக்கும் பிறந்தவர்கள். மூன்றாம் கடைநிலையில் ஆபிரிக்கத் தேசத்து அடிமைகள் இருந்தனர். இவர்களது மரணவீதம் கூடுதலாக இருந்ததால் தோட்டக்காரர்கள் அடிக்கடி ஆபிரிக்காவிலிருந்து புதிய அடிமைகளை ''இறக்குமதி'' செய்தனர்.இதனால் இவர்கள் தீவின் மற்றவர்களைப் போலன்றி ஆபிரிக்க பண்பாட்டுடன் தனித்திருந்தனர். மேலும் தீவில் ஏற்கெனவே இருந்த நாகரிகமடைந்த அடிமைகளிடமிருந்து பிரித்து வைத்தது.
<ref name="Laurent Dubois 2004"/> <ref name="kreyol-003">{{cite web|url=http://www.kreyol.com/history003.html|title= Haiti – French Colonialism|accessdate=27 November 2006}}</ref>
 
வெள்ளை குடியேற்றவாதிகளுக்கும் கருப்பின அடிமைகளுக்கும் அடிக்கடி வன்முறை மோதல்கள் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. இவற்றில் பெரும்பாலானவை தோட்டங்களிலிருந்து தப்பித்துச் சென்ற அடிமைக் கூட்டங்களால் நடந்தது. தப்பியோடியவர்களை ''மரூன்கள்'' என்று அழைத்தனர். இவர்கள் தோட்டங்களின் எல்லைகளில் மறைந்து வாழ்ந்ததோடன்றி திருட்டுக்களில் ஈடுபட்டனர்.சிலர் நகரப்பகுதிகளுக்கு ஓடிச்சென்று மற்ற கருப்பர்களுடன் இணைந்தனர். இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்பட்டன. இருப்பினும் காடுகளுக்கு கூட்டம் கூட்டமாக இவர்கள் தப்பிச் சென்றனர். கூட்டமாக இருந்தபோதும் இவர்களுக்கு தலைமையேற்று நடத்தும் திறனும் பேரளவு திட்டமிட்டு சாதிக்கும் வண்மையும் இல்லாதிருந்ததால் பெரும் சமர்கள் எதுவும் எழவில்லை.
 
முதல் திறனுள்ள மரூன் தலைவராக பிரான்சுவா மக்கன்டல் உருவானார். [[வூடு|எயித்திய வூடோ]] பாதிரியான மக்கன்டல் தம்மின மக்களை ஆபிரிக்க மரபு மற்றும் சமயங்களால் ஒருங்கிணைத்தார். பல்வேறு மரூன் கூட்டத்தினரையும் ஒற்றுமைப்படுத்தி இரகசிய அமைப்பொன்றை தோட்ட அடிமைகளிடத்தில் ஏற்படுத்தினார். 1751 முதல் 1757 வரை எழுந்த ஓர் எதிர்ப்பிற்கு தலைமையேற்றார். 1758இல் இவரை பிரெஞ்சுப் படையினர் பிடித்து உயருடன் எரித்த போதிலும் இவர் ஏற்றிய சுதந்தரத்தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. <ref name="brief">{{cite book|first=Jan|last=Rogozinski|year=1999|title=A Brief History of the Caribbean|edition=Revised|publisher=Facts on File|location=New York|pages=85, 116–117, 164–165|isbn=0-8160-3811-2}}</ref><ref name="kreyol-004">{{cite web|url= http://www.kreyol.com/history004.html|title=The Slave Rebellion of 1791|accessdate=27 November 2006}}</ref>
 
==பின் விளைவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/எயித்தியப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது