கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 13:
==வரலாறு==
கலம்காரி கலை மிகவும் பழமை வாய்ந்தது. இடைப்பட்ட காலத்தில் இக்கலை பெற்ற வளர்ச்சி வசதி படைத்த [[கோல்கொண்டா]] சுல்தானகம் மற்றும் [[ஐதராபாத்]] மன்னர்கள் ஆகியோரைச் சுற்றியே அமைந்திருந்தது. ஆந்திரபிரதேசத்தில் பல குடும்பங்கள் இக்கலையை தொழிலாகவும் வருவாயீட்டும் வழியாகவும் ஆக்கிக்கொண்டனர்.
பழங்காலத்தில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ஒரு குழுவாக இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று, மக்களிடம் [[இந்து சமயம்|இந்து சமய]] [[புராணம்|புராணக்]] கதைகளைச் சொல்லுவது வழக்கம். நாளடைவில் இந்தக்
▲'''முன்னுரை''' கலம்காரி என்பது பேனாவைப் பயன்படுத்தி துணியில் அழகுபடுத்தும் பழங்காலக் கலை. இந்தச் சொல், அழகிய வேலைப்பாடு மிகுந்த மாதிரியுரு கோலங்களைத் (patterns) தாவர சாயங்கள் மூலம் வரையப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட துணியைக் குறிப்பதற்கு முக்கியமாகப் பயன்படுத்தப்பட்டது. இவ்வகையான துணிகள் தற்போது இந்தியாவில் பல பகுதிகளிலும் தயாராகின்றன. எனினும் தென்மாவட்டங்களில் தான் இப்பழங்காலக் கலைமுறை இன்னமும் பயன்பாட்டில் உள்ளதால், கலம்காரி என்ற சொல் தென்மாவட்டங்களில் தயாராகும் துணிகளையே குறிக்கிறது. பேனாவால் பல கோலங்கள் வரையும் கலை ஆந்திரபிரதேசத்தில் தான் தொழிலாக வளர்ந்து வருகிறது. துணிகளில் அச்சிட்டாலும் நுண்ணிய மாதிரியுரு கோலங்கள் கண்கவர் வண்ணக்கலவைகள் எல்லாம் பேனாவினாலேயே வரையப்படுகின்றன. ஆந்திரபிரதேசத்தில் [[கடற்கரை ஆந்திரா]] மற்றும் கோல்கொண்டா பகுதிகளில் பணிபுரியும் கலம்காரி கலைஞர்களை ஆதரித்த முகலாயர்கள் ஒரு குறிப்பிட்ட பெயரில் இந்த துணிகளுக்குப் பெயரிட விரும்பினர். இவர்கள் இந்த வகை துணிகளுக்குச் சூட்டிய பெயர் கலம்கார் (Qua-lamkars) என்பதாகும்.<ref>{{cite web|last=Bhatnagar|first=Parul|title=Kalamkari|url=http://www.scribd.com/fullscreen/65619463?access_key=key-1i4e4emilphei76vaxgl|work=Traditional Indian Costumes and Textiles|publisher=suraj|accessdate=2004}}</ref>
▲பழங்காலத்தில் பாடகர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் ஓவியர்கள் ஒரு குழுவாக இணைந்து கிராமம் கிராமமாகச் சென்று, மக்களிடம் [[இந்து சமயம்|இந்து சமய]] [[புராணம்|புராணக்]] கதைகளைச் சொல்லுவது வழக்கம். நாளடைவில் இந்தக் கதைகளை சாயங்களையும் பெரிய ஓவியச்சீலைகளையும் (large bolts of canvas) பயன்படுத்தி காட்சிகளாக வரைந்தனர். இவ்வாறுதான் முதல் கலம்காரி ஓவியம் தோன்றியது. இது போல தான் கிருத்துவ தேவலயங்களில் வண்ண கண்ணாடிகள் அழகு செய்வது மாதிரி இந்துக் கோவில்களிலும் பெரிய ஓவியசீலைகளில் புராணக் கதைகள் கலம்காரி ஓவியங்களாக வரையப்பட்டன.
இடைப்பட்ட நாட்களில் சற்றே தளர்சசியுற்றாலும் இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் இக்கலை மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது எனலாம் கடந்த 18ஆம் நூற்றாண்டிலிருந்தே ஆங்கிலேயர்கள் இக்கலையில் ஆர்வம் கட்டினார்களாம்.
|