கலம்காரி கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
முரடான பருத்திக் காடாத் துணியானது குங்கிலியம் (பிசின்) மற்றும் பசும்பாலில் ஒரு மணி நேரம் மூழ்கியிருக்கும்படி வைக்கப்படுகிறது. இதனால் துணிக்குப் பளபளப்பும், வழவழப்பும் கிடைக்கின்றன. பின்பு நொதிக்க வைக்கப்பட்ட வெல்லம் மற்றும் நீர் கலந்த கலவையில் கூரான மூங்கில் குச்சி நனைக்கப்பட்டு துணியில் வடிவ விளிம்பு வரைவு கோடுகளாலான (contour) ஓவியம் வரையப்படுகிறது. பின்பு அக்கோட்டிலேயே தாவரச் சாயம் பயன்படுத்தி ஓவியம் வரையப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு வண்ணமாகத் தனித்தனியே வரையப்படுகிறது. இறுதியாகக் கலம்காரி துணி நீரில் அலசப்படுகிறது. ஒரு துணி மீண்டும் மீண்டும் குறைந்தது 20 முறைகளாவது இவ்வாறு அலசப்பட வேண்டியிருக்கும். வேண்டிய நுணுக்கங்களைப் (effects) பெற பசுஞ்சாணம், விதைகள், செடிகள், நசுக்கிய மலர்கள் எல்லாம் பயன்படுத்தப்படுகிறது
 
குங்கிலியத்துக்குப் பதிலாக கடுக்காயைப் பயன்படுத்தலாம். ஆனால் கடுக்காயிலுள்ள அதிக அளவு பதத்துவர் (tannin) காரணமாக கடுக்காயுடன் பசும்பாலுக்குப் பதில் எருமைப்பால் கலந்த கலவையில் காடாத்துணி ஊறவைக்கப்படுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கலம்காரி_கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது