பிறப்பிடத் தேவாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி சேர்க்கை - இற்றைப்படுத்தல்
வரிசை 36:
}}
 
'''பிறப்பிடத் தேவாலயம்''' (''Church of the Nativity'') உலகிலுள்ள பழைமையானதும் தொடர்ந்து செயற்பாட்டிலுள்ளதுமான தேவாலயங்களில் ஒன்றாகும். [[பாலத்தீன நாடு|பாலத்தீன ஆட்சிப் பகுதியில்]] உள்ள [[பெத்லகேம்|பெத்லேகேமில்]] அமைந்துள்ள இத்தேவாலயஇத்தேவாலயம் கட்டமைப்பு இயேசுவின்[[இயேசு]] பிறந்த இடத்தைஇடமாகக் குறிக்கும்விதமாககருதப்படும் தளத்தில் குகையின் மேல் கட்டப்பட்டுள்ளது. இது கிறிஸ்தவர்களினால்கிறித்தவர்களுக்கு மிகப் புனித புனிதமாகக்இடமாக கருதப்படுகிறதுஉள்ளது.<ref>[http://www.sacred-destinations.com/israel/bethlehem-church-of-the-nativity] Church of the Nativity, Bethlehem</ref>
 
==வரலாறு==
 
பெத்லகேம் ஊருக்கு வெளியே ஒரு குகைப் பகுதியில் [[மரியா (இயேசுவின் தாய்)|மரியா]] இயேசுவை ஈன்றெடுத்தார் என்னும் செய்தியை கி.பி. 2-3 நூற்றாண்டுகளில் வாழ்ந்த மறைச்சான்றாளர் யுஸ்தீன், ஒரிஜென் போன்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
 
[[காண்ஸ்டண்டைன்]] மன்னரின் தாய் ஹெலன் அரசி [[இயேசு]] பிறந்த இடத்தில் ஒரு கோவில் கட்டி எழுப்ப ஏற்பாடு செய்தார். அவ்வாறே 327-333 ஆண்டுக் காலத்தில் முதல் கோவில் கட்டப்பட்டது.
 
அக்கோவில் 529இல் நிகழ்ந்த சமாரியர் கலகத்தின்போது அழிந்தது. அதே இடத்தில் பெரிய அளவில் புதிய கோவில் ஒன்றினை முதலாம் ஜஸ்டீனியன் பேரரசர் 565இல் கட்டி எழுப்பினார். அக்கோவில் இன்றுவரை நிலைத்துள்ளது.
 
==கோவில் ஆட்சி முறை==
 
இயேசு பிறந்த இடத்தில் எழுகின்ற கோவில் எல்லாக் கிறித்தவர்களுக்கும் முதன்மை வாய்ந்தது. இன்று இக்கோவிலின் ஆட்சி உரோமன் கத்தோலிக்க திருச்சபை, கிரேக்க மரபுவழி திருச்சபை, மற்றும் ஆர்மீனிய திருத்தூதர் சபை என்னும் மூன்று அமைப்புகளின் கையில் உள்ளது.
 
==யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்==
 
வரலாற்றுச் சிறப்பும் சமய முதன்மையும் கொண்ட இக்கோவில் ஓர் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று [[யுனெசுக்கோ|யுனெசுக்கோவால்]] அறிவிக்கப்பட்டுள்ளது. [[பாலத்தீன நாடு|பாலத்தீன ஆட்சிப் பகுதியின்]] முதல் உலகப் பாரம்பரியக் களமாக இக்கோவில் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். பழுதுபார்க்கும் பணியும் புதுப்பித்தல் பணியும் அக்கோவிலுக்கு உடனடியாகத் தேவைப்படுகின்றன என்பது இம்முடிவுக்கு அடித்தளமாயிற்று.
 
2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் [[யுனெசுக்கோ]] நிறுவனம் பாலத்தீனத்தை நாடுகள் பட்டியலில் சேர்த்தது. அதுகுறித்து [[இசுரயேல்]] எதிர்ப்புத் தெரிவித்ததால் சர்ச்சை எழுந்தது.
 
அதன் பின்னணியில் யுனெசுக்கோ நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களக் குழு 2012ஆம் ஆண்டு சூன் மாதம் 29ஆம் நாள் கூட்டத்தில், 36ஆம் அமர்வின்போது [[இயேசு]] பிறந்த இடக் கோவில் [[உலகப் பாரம்பரியக் களம்]] என்று அறிவித்தது.
 
இந்த முடிவு அரசியல் உள்ளர்த்தம் கொண்டது என்று [[இசுரயேல்|இசுரயேலும்]] [[அமெரிக்க ஐக்கிய நாடுகள்|அமெரிக்க ஐக்கிய நாடுகளும்]] கூறின. ஆனால், பாலத்தீன ஆட்சிப் பகுதி யுனெசுக்கோ நிறுவனத்தின் முடிவை வரவேற்றுள்ளது.<ref>[http://en.wikipedia.org/wiki/Church_of_the_Nativity இயேசு பிறந்த இடக் கோவில்]</ref>
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/பிறப்பிடத்_தேவாலயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது