வயிற்றுப் புண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி இணைப்பு: sl:Peptična razjeda |
No edit summary |
||
வரிசை 1:
{{merge to|குடற்_புண்}}
மனித உடலில் இருக்கும் பல இன்றியமையாத உறுப்புகளுள் [[குடல்|குடலும்]] ஒன்றாகும். மனிதன் உட்கொள்ளும் உணவைச் செரித்தல் குடலின் முக்கிய பணி. உணவு செரிக்கவில்லையெனில் மனித உயிருக்கே ஆபத்து உண்டாகும். இரைப்பை, முன் சிறுகுடல் பகுதிகளின் உட்சுவரில் திசுத்தோல் அரிந்து காயமாதலே ''குடல்புண்'' எனப்படும். இயற்கையில் இப்பகுதிகள் அமிலத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பதற்கென ஓர் கோழைப் பொருளைக் கொண்டுள்ளன. இப்பொருள் அழிக்கப்பட்டால் அங்கு திசுக்களில் வீக்கம் ஏற்படும். உட்தோல் பாதிப்படையும்.
குடல்புண் [[ஹேலிக்கொபேக்டர் பைலோரி]] எனும் [[பாக்டீரியா|பாக்டீரியாவினால்]] தோன்றுகிறது. [[ஆசுப்பிரின்]] மற்றும் சில வலி நிவாரண மருந்துப் பொருட்களைத் தேவைக்கு அதிகமாக உட்கொள்ளுதல், புகைபிடித்தல், மது அருந்துதல், கஃபீன் மற்றும் உளவியல் அழுத்தங்கள் போன்றவையும் குடல்புண் தோன்றக் காரணமாக அமைகின்றன.
==குடல்புண் வகைகள்==
குடல்புண் இருவகைப்படும். அவை:
* முன்குடல் புண்
* இரைப்பைப் புண்
===முன்குடல் புண்===
குடல் புண்களில் முன்குடல் புண்ணே அதிகமாகத் தோன்றுகிறது. பொதுவாக இது 25-45 வயதுடையவர்களை அதிகம் தாக்குகிறது.
50 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரைப்பைப் புண்ணால் பாதிக்கப்படலாம்.
==குடல்புண்ணைத் தடுத்தல்==
குடல்புண் பாதிப்பின் அளவை [[உள்நோக்கு கருவி]]யால் அளக்கலாம். புண்ணில் ஓட்டை ஏற்பட்டிருந்தாலோ அல்லது இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ உடனடிச் சிகிச்சை அவசியமாகும். பொதுவாக இதற்கான சிகிச்சை முறைகள் புண் ஆறுவதற்கான முறைகளாகவும், அது மீண்டும் ஏற்படாத வகையிலும் அமைக்கப்படுகிறது. வாழ்க்கை முறைகளை மாற்றியமைத்தல், புகைப்பிடித்தலைத் தவிர்த்தல், மது அருந்தாதிருத்தல், கவலை, மன அழுத்தம் ஆகியவற்றை தவிர்த்தல் போன்றவற்றின் மூலமும் குடல்புண்ணைத் தவிர்க்க இயலும்.
==குடலிறக்கம்==
குடலிறக்கத்தினைப் பொதுவாகக் கீறல்கள் என்பர்.வயிற்றுப்புறத் தசைகளில் வலிமை குன்றிய இடங்களில் இக்குறைப்பாடு நேரிடலாம். இந்நிலை திடீரென எடை மிகுந்த பொருட்களைத் தூக்குவதால் ஏற்படும். இதனால் ஓர் பிதுக்கம் வெளியாகத் தென்படும். அதனுள் கொழுப்புத் திசுக்களோ அல்லது குடலின் பகுதியோ பிதுங்கியிருக்கும். கடின உடலுழைப்பு மேற்கொள்ளும் ஆண்களில் கீழ்வயிற்று குடலிறக்கம் தோன்றும்.
===குடலிறக்கக் குடல்பிதுக்கம்===
குடலிறக்கத்தில் குடலின் ஒரு பகுதி திருகலடைந்து பிதுக்கத்தினுள் நுழைந்துவிடும். அப்பகுதியில் இரத்த ஓட்டம் தடைப்படலாம். இதற்குக் குடலிறக்கக் குடல்பிதுக்கம் என்று பெயர். மிக அதிக வலியிருப்பின் உடனடி அறுவைச் சிகிச்சை தேவை.
====குடல்பிதுக்க வகைகள்====
கவட்டைப்பிதுக்கம் குடலின் ஒரு பகுதி அடிவயிற்றுப் பகுதியில் வலிமைக் குறைவு காரணாமாகக் கீழிறங்கி விடும்.
===மேல்தொடைப் பிதுக்கம்===
வயிறும் தொடையும் சேருமிடத்தில் துடைத்தமனியும் சிரையும் கீழ்வயிற்றிலிருந்து தொடைப்பகுதிக்கு இறங்கும். இங்கு குடல்பிதுக்கம் ஏற்படலாம். அதிக உடல் எடை அல்லது பல குழந்தைகளைப் பெறல் ஆகிய காரணங்களால் பெண்களுக்கு இக்குறை நேரிடலாம்.
==கொப்பூழ் குடலிறக்கம்==
இக்குறைபாடு சிறு குழைந்தைகளுக்கு ஏற்படும். நாபியைச் சுற்றியுள்ள பகுதியில் வயிற்றுத் தசைகள் தளர்ச்சியடைவதால் இவ்விறக்கம் தோன்றும்.
==குடல்வால் அழற்சி==
குடல்வாலில் வீக்கம் ஏற்பட்டுக் கடுமையான வயிற்றுவலி தோன்றலாம். பெருங்குடல் துவங்கும் இடத்தில் ஓர் சிறிய குழலாகக் குடல்வாலுள்ளது. இக்குடல்வால் அழற்சி வளர் இளம் பருவத்தினரிடையே பொதுவாகத் தோன்றும். நார்ப்பொருள் குறைவாகவுள்ள உணவுண்ணும் வளர்ச்சியடைந்த நாட்டினரிடையே இந்நோய் அதிகம். குடல்வால் வீகத்தால் தடுப்பு நிலை ஏற்படும்.
துவக்கத்தில் திடீரென மேல் வயிற்றில் வலியும், வாந்தியுணர்வும்,காய்ச்சலும் தோன்றும். சிகிச்சை காலதாமதமானால் நோயுற்ற குடல்வால் வெடித்து வயிற்றறையில் தொற்று நேரிடலாம். இவ்வகையில் தோன்றும் பாதிப்பிற்கு உதரப்பை அழற்சி எனப்படும். அறுவைச் சிகிச்சையால் குடல்வாலை நீக்கலாம்.
==பித்தக்கற்கள்==
பித்தப்பையில் தோன்றும் பித்தக்கற்கள் பல அளவுகளில் அமையலாம். 40 வயதிற்கு மேற்பட்டவர்களில் பத்தில் ஒருவருக்கு இக்கற்கள் தோன்றலாம். இக்கற்கள் பித்தநீரில் தோன்றும். பித்தநீரில் கொலஸ்டிரால்,நிறமிகள் மற்றும் சில உப்புகள் உள்ளன. பித்தநீரின் தன்மைகளில் மாற்றங்கள் ஏற்பட்டால் கல் தோன்றுதல் நிகழலாம். இக்கற்கள் கொலஸ்டிராலால் ஆனவை. கல் தோன்றுதலுக்கான மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை. உடற்பருமன் அதிகரிப்பு,உணவில் கொழுப்பு அதிகரித்தல் போன்ற காரணங்களால் கல் தோன்றலாம்.மிகுந்த பாதிப்பு நிலையில் கற்களால் பித்தநீர் நாளத்தில் அடைப்பு ஏற்பட்டு மஞ்சள் காமாலை தோன்றும்.
==கல்லீரல் அழற்சி==
பல காரணாங்களால் கல்லீரல் அழற்சி ஏற்படுகிறது. இந்நோயில் வைரஸ்களின் தாக்குதலால் கல்லீரலில் வீக்கம் ஏற்படுகிறது. தொற்று நோயற்ற கல்லீரல் அழற்சி அதிக அளவு மது அருந்துதலால் ஏற்படும். ஆரம்ப நிலையில் இதன் அறிகுறிகள் தெளிவாக இருப்பதில்லை. இந்நோயால் உடற்சோர்வு, வாந்தியெடுத்தல், காய்ச்சல், வலது மேல் வயிற்றுப்பகுதியில் ஓர் வசதியற்ற உள்ளுணர்வு போன்றவை ஏற்படும். இந்நோய்க்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இந்நிலையுள்ளோருக்கு நல்ல ஓய்வு தேவை. மது அருந்துதலைத் தவிர்க்க வேண்டும்.
[[பகுப்பு:நோய்கள்]]
[[பகுப்பு:வயதாவதுடன் தொடர்புடைய நோய்கள்]]
|