ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் இனத்தைச் சேர்ந்ததுசேர்ந்தவை. கடலில் வாழும் பெண் ஆமைகள், கருத்தரித்ததும், கடற்கரையை நோக்கி கூட்டமாககூட்டமாகப் பயணிக்கத் துவங்கும். கரையை அடைந்ததும் மண்ணில் குழி தோண்டி முட்டைகளை இட்டுவிட்டு சென்றுவிடுகின்றன. ஆழ்கடலில் இனப்பெருக்கம் செய்யும் இவை மணற்பாங்கான கடற்கரையில்தான் முட்டையிடுகின்றன. கடற்கரையில் 50 முதல் 80 செ.மீ வரையிலான குழி தோண்டி அதில் 100 முதல் 150 முட்டைகள் வரை இட்டு அக்குழியை மூடி விடுகின்றன. 200 முட்டைகளை ஒரே சமயத்தில் கூட இட்டுவிடும். முட்டைமுட்டைகள் குஞ்சுகளாக மாற சூரிய வெப்பம் தேவை என்பதால் முட்டையிட மட்டுமே அவை கடற்கரைக்கு வருகின்றன. 60 முதல் 90 நாட்களில் முட்டைகள் குஞ்சுகளாகி கடலை நோக்கி ஊர்ந்து சென்று பின்னர் நீரில் நீந்தி ஆழ்கடலை அடைகின்றன. 1000 ஆமைகளில் ஒன்றுதான் பல்வேறு தடைகளைத் தாண்டி முதிர்ந்த பருவத்தை அடையும். பயணத்தின் வழியிலும் முட்டையிடும் பழக்கம் கடல் ஆமைகளுக்கு உண்டு.