தனது தகவல்களையும் ,கருத்துக்களையும் பேச்சு (மற்றும் எழுத்து ) மூலம் வெளிப்படுத்தும் மனித ஆற்றலானது மற்றய உயிரினங்களுடன் ஒப்பிட முடியாத ஒன்றாகும். மற்றய விலங்கினங்களின் மூடிய குறி அமைப்புகளை போலல்லாமல் மனிதர்களின் மொழி திறந்த அமைப்புடையது அத்துடன் குறிப்பிட்ட அளவு ஒலிகளையும் சொற்களையும் கொண்டு முடிவற்ற எண்ணிக்கையான அர்த்தங்களை உருவாக்கும் வல்லமை படைத்தது .