1971 மார்சசில் ஜே.வி.பி.யின் இரகசிய ஆயுதக்கிடங்கு பற்றி ஆளும் [[சீறிமாவோசிறிமாவோ பண்டாரநாயக்க]] அரசிற்குத் தெரியவந்தது. இதனை அடுத்து ஜே.வி.பி.யின் தலைவர் ரோகண வீஜயவீர உடனடியாகக் கைது செய்யப்பட்டார். பின்னர் [[யாழ்ப்பாணம்]] சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார். தலைவர் சிறைக்குள் இருக்கும்பொழுதே [[1971]] [[ஏப்ரல் 5]]ம் திகதி இலங்கை அரசிற்கு எதிராக ஜேவிபியினர் நாட்டின் பல பாகங்களில் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல பொலிஸ் நிலையங்கள் தாக்கப்பட்டன. தெற்கின் பல பாகங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. கிளர்ச்சியினை முறியடிக்க இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியினைக் கோரியது. உதவிக்கு விரைந்த [[இந்தியா]], [[சீனா]] நாடுகளின் உதவியுடன் ஆயுதக்கிளர்ச்சி இரண்டு வார காலத்தினுள் அடக்கப்பட்டது. ஜேவிபி உறுப்பினர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். முடிவில் ஜேவிபியினை இலங்கை அரசு தடை செய்தது.