மா. இராசமாணிக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தமிழார்வம்: இணைப்புகள்
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 8:
[[திண்டுக்கல்]] நகரவை உயர்நிலைப்பள்ளியில் அந்நாளில் உடற்பயிற்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒருவர் இராசமாணிக்கனாருக்கு பள்ளி அருகிலிருந்த மௌனசாமி மடத்தின் இளந்துறவி ஒருவரை அறிமுகப்படுத்தினார். அத்துறவி [[சித்தர்]] பாடல்களையும் அருட்பாவையும் இவர் அறியுமாறு செய்தார். சித்தரிடம் பயின்றதால் இளமையிலேயே சாதி ஒழிப்பு குறித்தும் தமிழ் இலக்கியம் குறித்தும் இவருக்கு ஆர்வம் பிறந்தது.
 
மீண்டும் தமையனார் இராமகிருட்டிணருக்கு நன் லத்திலிருந்துநன்னிலத்திலிருந்து தஞ்சாவூருக்குப் பணி மாற்றலாகிய நிலையில் அங்கு தம் படிப்பைத் தொடர விரும்பினார் இராசமாணிக்கனார். ஆனால் மாணிக்கனார் படிப்பு பலமுறை தடைபட்டதால் அவரை ஒரு தையல் கடையில் அவரது அண்ணன் வேலைக்குச் சேர்த்து விட்டார். ஆனால் படிப்பார்வம் கொண்ட இராசமாணிக்கனாரின் கல்வி [[தஞ்சாவூர்]] புனித பீட்டர் பள்ளித் தலைமையாசிரியரின் பேருதவியால் தொடர்ந்தது. பள்ளியில் முதல் மாணவராக வந்ததால் இவரின் கல்வி தடையின்றி தொடர்ந்தது.
 
இவரது உயர்நிலைக் கல்வியின் போது இவரது அண்ணனுக்கு மீண்டும் [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திர மாநிலத்திற்கு]] பணிமாற்றம் ஆனது. அவர் அனுப்பிய பணம் கல்வி செலவுக்கு போதாததால் இவர் இராண்டாம் மற்றும் மூன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு தனிப்பாடம் நடத்தி அதில் வரும் வருவாயை வைத்து கல்வியைத் தொடர்ந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/மா._இராசமாணிக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது