இளங்கோ (வேங்கையின் மைந்தன்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
Booradleyp (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 9:
===கடமை===
கடமை என வந்துவிட்டால் அதைத் தவிர வேறொன்றும் கண்ணுக்குப் புலப்படாத குணம் இந்த கொடும்பாளூர் வேளிர்களுக்கு. அவ்வழியில் வந்த இளங்கோவும் கடமையை நிறைவேற்றுவதில் உயிரைக்கூட துச்சமாகக் கருதுபவன். இவன், அனைத்து போர்களிலும் கலந்து கொண்டு எதிரிகளை வென்று புலிக்கொடியை நாட்டுவதே தனது தலையாகக் கடமையாகக் கொண்டவனாய் கதைக்குள் வலம் வருகிறான்.
 
===காதல்===
இக்கதையில் இவனுக்கு காதலிகள் இருவர். ஒருத்தி இராசேந்திர சோழரின் மூத்த பெண் அருள்மொழிநங்கை; மற்றொருத்தி ஈழநாட்டு மன்னன் மகிந்தரின் பெண் ரோகிணி. முன்னவள் தன் மீது அன்பு செலுத்துகிறாள் என்பது அவனுக்குக் கதையின் மூன்றாம் பாகத்தில் தான் தெரிய வருகிறது. முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அருள்மொழி நங்கை தன் மீது காட்டும் அன்பை ஒருவித மரியாதையாகவும் பரிவும் என நினைத்துவிடுகிறான்.
 
பாண்டியன் முடிமீட்க ஈழத்தின் மீது படையெடுத்த போது அங்கு ரோகிணியைச் சந்திக்க நேர்கிறது. அவர்கள் இருவருக்கிடையில் அன்பும் காதலும் மலர்ந்தாலும் சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அவர்களுக்கிடையே பூசலையும் போராட்டங்களையும் வளர்க்கின்றன. இளங்கோவின் கடமைக்குப் பின்புதான் வேறெதுவும் என்ற முரட்டுத்தனமும் பிறந்த நாட்டின் மீது கொண்ட பற்றுக்கும் தான் காதலிப்பவன் நாட்டின் நன்மைக்கும் இடையே ஊசாலாடும் ரோகிணியின் தெளிவின்மையும் இருவரையும் பலமாக அலைக்கழிக்கின்றன. ஆனால் அனைத்து இடர்களையும் தாண்டி அவர்களிடையே மலர்ந்த காதல் பலமாக வேரூன்றி விடுகிறது. இராஜேந்திர சோழரும் வல்லவரையும் அரசியல் லாபத்திற்காக இவர்கள் நெருங்கிப் பழகுவதை மறைமுகமாக ஆதரிக்கின்றனர்.
 
கடமையைக் கண்ணாகக் கருதும் இளங்கோவின் இதயத்துக்குள்ளும் காதல் என்னும் மெல்லுணர்வு அவனை வலுவாக ஆட்டி வைப்பதை இக்கதை முழுவதும் உணரலாம்.
"https://ta.wikipedia.org/wiki/இளங்கோ_(வேங்கையின்_மைந்தன்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது