ஆரியச் சக்கரவர்த்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 13:
[[File:Sri Lanka geopolitics, 1520s.png|180px|வலது|thumb|1520களில் யாழ்பான அரசு (வெள்ளை நிறம்)]]
'''ஆரியச் சக்கரவர்த்திகள்''' என்பது, இலங்கைத் தீவின் வட பாகத்திலிருந்த [[யாழ்ப்பாண இராச்சியம்|யாழ்ப்பாண இராச்சியத்தை]] 13 ஆம் நூற்றாண்டு தொடக்கம் 17ஆம் நூற்றாண்டு முற்பகுதி வரை ஆண்ட அரச வம்சத்து மன்னர்களைக் குறிக்கும். இவ்வம்சத்தின் தோற்றம் பற்றியோ இவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது பற்றியோ எல்லோரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்கள் ஏதும் இல்லை. பெரும்பாலும் இவர்கள் [[முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன்]] என்ற பாண்டிய மன்னனின் அமைச்சர் [[ஆரியச் சக்கரவர்த்தி (பாண்டிய அமைச்சன்)|ஆரியச் சக்கரவர்த்தி]] வழி வந்தவர்களே என்று கூறப்பட்டாலும்<ref>Pathmanathan, ''The Kingdom of Jaffna'',p.11</ref> மாற்றுக் கருத்துகளும் உள்ளன. இவ்வரசைத் தொடங்கிய [[கூழங்கைச் சக்கரவர்த்தி]] தென்னன் நிகரானவன் என்று போற்றப்படுவதால் இது [[பாண்டியர்]] ஆணை கீழ் நட்ந்த இராச்சியம் என்பது பெரும்பாலானோர் கருத்து.<ref>“தென்னன் நிகரான செகராசன்</br>
எனினும் இம் முதல் ஆரியச் சக்கரவர்த்தியின் காலம் பற்றியோ அல்லது அவ்வரசனுடைய அடையாளம் பற்றியோ பொதுக்கருத்துக் கிடையாது. வடமேற்கு இந்தியாவின், [[குஜராத்]], கிழக்கிந்தியாவிலிருந்த [[கலிங்க நாடு|கலிங்க தேசம்]], தமிழ் நாட்டிலுள்ள [[ராமேஸ்வரம்]], [[சோழநாடு]] போன்ற பல இடங்களையும், அவர்களது பூர்வீக இடங்களாகக் காட்டப் பல ஆய்வாளர்கள் முயன்றுள்ளார்கள்.
|