ஸ்ரீதரன் (சொற்பொருள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி ஸ்ரீதரன் என்ற சொற்பொருள், ஸ்ரீதரன் (சொற்பொருள்) என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
சி சிறுதிருத்தம்
வரிசை 5:
எல்லா இந்து இலக்கியங்களிலும், குறிப்பாக [[நாலாயிரத்திவ்ய பிரபந்தம் |நாலாயிரத்திவ்யப் பிரபந்தத்திலும்]] எல்லா வைணவ நூல்களிலும் கடவுள் நாராயணனுக்கு லட்சுமி தேவியை மார்பில் தாங்குபவர் என்ற அடைமொழி இல்லாமல் இருக்காது. ஓரிரு எடுத்துக் காட்டுகள்:
 
[[திருப்பாணாழ்வார்]] இயற்றிய அமலனாதிபிரானில் <ref> பிரபந்த எண் 931. அமலனாதிபிரான்.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர்முனைவர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> 'திருமகள் உறையும் மார்பே என்னை ஆட்கொண்டது' என்கிறார் ஆழ்வார். 'திருவுக்கும் திரு ஆகிய செல்வா'<ref> பிரபந்த எண் 1608. பெரிய திருமொழி. நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர்முனைவர் ஜெகத்ரக்ஷகன். 1997. </ref> என்று தொடங்கும் பாசுரத்தில் [[திருமங்கை ஆழ்வார்]] 'திருமார்பா' என்றே வடமொழிப் பெயர் 'ஸ்ரீதரா'வின் மொழிபெயர்ப்பாக அழைக்கிறார்.[[நம்மாழ்வார்]] [[திருவாய்மொழி]] யில்<ref> பிரபந்த எண் 3559.நாலாயிர திவ்ய பிரபந்தம்.நயவுரை: டாக்டர் ஜெகத்ரக்ஷகன். 1997.</ref> 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பா'என்றே 'ஸ்ரீதரன்' என்ற சொல்லை விளக்குகிறார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீதரன்_(சொற்பொருள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது