அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
== விளக்கம் ==
மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.
{{cquote|‘... ... ... ; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு
தொடுத்துமன் சேறலின் தொடையே’}}
 
என்னும் நூற்பா, ‘அடி’ என்றதன் பெயர்க்காரணத்துடன் அதன் விளக்கத்தையும் ஒருங்கே அறிவிப்பதாக அமைகிறது.
வரிசை 15:
என்பது குறள் வெண்பா. இது, இரண்டு வரிகளால் ஆகியது என்று கூறக்கூடாது; இரண்டு அடிகளால் வந்தது என்றே கூறுதல் வேண்டும். இங்கு, அடி என்பது பாவின்அடி,
 
{{cquote|‘கற்றதனா லாய’}}
 
என்பதில் இரண்டு சீர்கள் உள்ளன. இவை ஒரு தளையை உண்டாக்குகின்றன. ஒரு தளையை உண்டாக்குகின்ற இரண்டு சீர்களே பாவின் ஓரடியாகி நிரம்புவதும் உண்டு.
வரிசை 21:
சான்று:
{{cquote|‘திரைத்த சாலிகை
நிரைத்த போல்நிறைந்(து)
 
இரைப்ப தேன்களே
விரைக்கொள் மாலையாய்’""
 
விரைக்கொள் மாலையாய்’""}}
 
இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.
வரி 30 ⟶ 32:
மேலும் யாப்பிலக்கண நூலார் சிலர், ஒருதளையான் வந்த அடி, ‘குறளடி’; இருதளையான் வந்த அடி ‘சிந்தடி’; மூன்று தளையான் வந்த அடி, அளவடி; நான்கு தளையான் வந்த அடி, நெடிலடி; நான்கு தளையின் மிக்கு ஐந்து தளையானும் ஆறு தளையானும் ஏழு தளையானும் வரும் அடி, கழிநெடிலடி என்றும் சொல்வதும் உண்டு.
 
{{cquote}}‘குறள்ஒரு|"குறள்ஒரு பந்தம்; இருதளை சிந்தாம்;
 
முத்தளை அளவடி; நால்தளை நெடிலடி;
ஐந்தளை முதலா எழுதளை காறும்
 
வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப’}}
ஐந்தளை முதலா எழுதளை காறும்
 
வந்தவும் பிறவும் கழிநெடில்; என்ப’என்ப"}}
 
இவ்வகையில் ‘சீரடி’ குறளடி, சிந்தடி,அளவடி, நெடிலடி, கழிநெடிலடி என ஐந்து வகைப்படும்.
"https://ta.wikipedia.org/wiki/அடி_(யாப்பிலக்கணம்,_சீர்_எண்ணிக்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது