அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
மனிதன், விலங்கு முதலியன அடிகளால் நடக்கின்றன. நடக்கத் துணையாகும் அடியைப் ‘பாதம்’ என்கின்றோம். பாட்டும் அடியால் நடத்தல் ஒப்புமை பற்றிப் பாடலடியையும் அமிதசாகரர் ‘பாதம்’ என்கின்றார்.
{{cquote|‘... ... ... ; அத்தளை
அடுத்து நடத்தலின் அடியே; அடி இரண்டு
தொடுத்துமன் சேறலின் தொடையே’}}
வரி 26 ⟶ 28:
இரைப்ப தேன்களே
விரைக்கொள் மாலையாய்’"<ref>சூளாமணி, சீயவதை. பா.172.</ref>}}
இவ்வாறு வருவனவற்றைச் ‘சீர்அடி’ என்பர். சீர்கள் இரண்டினால் ஓரடி நிரம்பினால் அதைக் குறளடி என்றனர். சீர்கள் மூன்றனால் நிரம்பினால் அது சிந்தடி; சீர்கள் நான்கனால் நிரம்பினால் அளவடி அல்லது நேரடி; ஐந்தனால் நிரம்பினால் நெடிலடி; ஆறு, ஏழு, எட்டு என ஐந்துக்கும் மேற்பட்ட சீர்களால் நிரம்பினால் கழிநெடிலடி என்றனர் யாப்பிலக்கண நூலார். இவற்றையே சொல்லும்முறை மாற்றி இரண்டு சீர்களால் இயங்குவது குறளடி; மூன்று சீர்களால் இயங்குவது சிந்தடி; நான்கு சீர்களால் இயங்குவது அளவடி; ஐந்து சீர்களால் இயங்கும் அடி நெடிலடி; ஐந்துக்கும் மேற்பட்ட அடிகளால் இயங்கும் அடி, கழிநெடிலடி என்றும் கூறுவர்.
|